காட்டுத் தீயை கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்கள் கனடாவில் ஆடிப் பாடி நடனம்

கனடாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்கள் ஆடிப் பாடி தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டனர்.

கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத் தீயை விரைந்து கட்டுப்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து 200 வீரர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Edmonton நகருக்கு வந்தடைந்த வீரர்கள், தங்களது உடைமைகளுடன் விமான நிலையத்திலேயே நடனமாடினர்.

தீயணைப்பு பணியில் களமிறங்குவதற்கு முன்பாக, தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளும் விதமாக, தென்னாப்பிரிக்க கொடிகளை ஏந்தியவாறு பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.