துனிசிய கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

துனிசியா,

துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற 3 படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.

துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் திருட்டுத்தனமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி அகதிகளாக தப்பி சென்ற போது 3 படகுகள் கடலில் கவிழ்ந்து மூழ்கியது.

இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 6 குழந்தைகள் உள்பட 47 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. 73 பேரை கடலோர ரோந்து படையினர் மீட்டதாக துனிசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.