இலங்கையின் மாலைதீவு உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் கௌரவ அலி ஃபைஸ் (Ali Faiz) அவர்கள் நேற்று (04) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இலங்கை – மாலைதீவு கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வுக்கு இணையாக நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், மாலைதீவு உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதி இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமுகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. மேலும், கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் கொமடோர் கோசல வர்ணகுலசூரிய மற்றும் இலங்கைலுள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹசன் அமீர் (Colonel Hassan Amir) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.