சென்னை: டெண்டர்களில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்கள் முன்வைப்புத் தொகையை செலுத்துவதில் புதிய நடைமுறையுடன், பழைய நடைமுறையையும் சேர்த்து தொடர அனுமதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கேசிபி இன்ஃப்ரா நிறுவனம் சார்பில் அதன் இயக்குநரான முத்துக்குமாரசுவாமி தாக்கல் செய்த மனுவில், "எங்களது நிறுவனம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எந்த அரசு துறைகளில் ஒப்பந்தம் எடுப்பதாக இருந்தாலும் ஒப்பந்த மதிப்பில் ஒரு சதவீத தொகையை முன்வைப்புத் தொகையாக வங்கி வரைவோலையாகவோ அல்லது நிரந்தர வைப்புத் தொகையாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ அளிக்கும் நடைமுறை இதுவரை இருந்து வந்தது.