மகளிர் உரிமைத் தொகை – நெருங்கும் இறுதி கட்டம்: அதிகாரிகள் நடத்தும் கள ஆய்வு!

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக நடப்பு நிதி ஆண்டில் 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் தகுதியான ஒரு கோடி பேரை கண்டறிந்து பயனாளர்களாக இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு கட்டங்களாக வீடு வீடாக சென்று விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுகின்றன. அதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சுமார் 2 கோடியே 24 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. ஆனால் ஒரு கோடி பேருக்கு மட்டுமே உரிமைத் தொகை கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளதால் பாதிக்கும் மேலானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அதற்கேற்ப அரசு வெளியிட்ட நிபந்தனைகளும் அமைந்துள்ளன.

தூத்துக்குடியில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” பதிவு முகாம்

எனவே விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்று அதை முறையாக பதிவு செய்பவர்கள் அனைவரும் பயனாளர்கள் ஆகிவிட முடியாது.

சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளன. இந்த சரிபார்ப்பு பணியின் போது பலர் வடிகட்டப்பட வாய்ப்பு உள்ளது.

விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் உருவாக்கப்படும் பட்டியலும் இறுதியானது அல்ல. அந்த பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளுக்கு அரசு அதிகாரிகள் டீம் கள ஆய்வு செய்வார்களாம். அப்போது விண்ணப்பதாரர்கள் வழங்கிய தகவல்கள் உண்மை என்பதை உறுதி செய்தே பயனாளர்களின் இறுதி பட்டியல் தயாராகும் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.