முன்னான் முதல்வரான ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருநாவுக்கரசு சாட்சியத்தை மறைக்க பார்ப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் 1989ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுகவால் சட்டமன்றத்தில் தாக்கப்பட்டார் என்றும் திமுகவினர் அவரது சேலையை பிடித்து இழுத்ததாகவும் நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்பி கனிமொழிக்கு பதில் அளித்த நிர்மலா சீதா ராமன் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் மறுப்பு
இதனால் அப்போது நடந்த இந்த விவகாரம் இப்போது பேசு பொருளாகியுள்ளது. இதுகுறித்து ஜெயலலிதா அப்போது பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அந்த சம்பவம் ஜெயலலிதாவால் அரங்கேற்றப்பட்ட நாடகம் என கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்இதுபோன்ற ஒரு நாடகத்தை நடத்த ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் ஒத்திகை பார்த்ததாக அப்போதைய எதிர்க்கட்சி துணை தலைவரான திருநாவுக்கரசு கூறியதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலினின் இந்த இந்த பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது சட்டமன்ற உறுப்பினராக ஜெயலலிதாவுடன் தான் சட்டமன்றத்தில் இருந்ததாகவும், திமுகவினரால் ஜெயலலிதா கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தமிழிசை சவுந்தரராஜன்
இப்போதைய மூத்த அமைச்சர் ஒருவர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார் என்றும் கூறினார். இந்நிலையில் புதுச்சேரி ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதாவது “தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் ஆடைகள் கிழிக்கப்பட்டன. அவர் மீது கனமான பொருட்கள் வீசப்பட்டு பெண் என்றும் பாராமால் துன்புறுத்தப்பட்டு வெளியே வந்தார் என்பது வரலாறு.
திருநாவுக்கரசு மாற்றி பேசுகிறார்ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அவர்தான் அப்படி சொல்கிறார் என்றால், சகோதரர் திருநாவுக்கரசும் மாற்றி பேசுகிறார். எங்களோடும் இருந்தவர்தான்.. சில நேரம் திருநாவுக்கரசு பதவிக்காக கட்சிதான் மாறினார் என்றில்லை… தற்போது பதவிக்காக சாட்சியத்தையும் மாற்றிவிட்டார் என்பதுதான் கவலையாக உள்ளது.
சரித்திரம் நடந்தது நடந்ததுதான்
சரித்திரம் நடந்தது நடந்ததுதான். இதை மறைப்பதால் எந்த பலனும் இல்லை. இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள்
நடக்கக்கூடாது என்று முடிவு செய்வோம். பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என முடிவு செய்வோம். அப்படிதான் இருக்க வேண்டுமே தவிர பட்டவர்த்தனமாக நடந்ததை நடக்கவில்லை என்று சொன்னால் சொல்பவர்கள் மீது இளைஞர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்பதை நான் கேள்வியாகவே முன் வைக்கிறேன்” இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.