12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழக அரசு இன்று அதிரடியாக 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி

தொழில் துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ராஜாராமன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி பூஜா குல்கர்னியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக பிரகாஷ் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக ஸ்ரீவெங்கட பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கலையரசி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பையும் கலையரசி கூடுதலாக கவனிப்பார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சிகி தாமஸ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ஆனந்த் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சிறு தொழில் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய செயல் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக மோனிகா ரானா ஐஏஎஸை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.