டில்லி கர்நாடக அரசுக்கு பெலகாவியில் ஒரு பெண் கட்டி வைத்து சித்ரவதை செய்யப்பட்டதற்காக மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல் நடத்தியதோடு, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாகக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் மகனும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். பெண் வீட்டார் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. […]
