சென்னை: ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை இழந்த 3வது நபர் என்ற பெயரை பெற்றுள்ளார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி. ஏற்கனவே அதிமுக ஆட்சியின்போது, ஊழல் வழக்கில், அப்போதைய அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தங்களது பதவிகளை இழந்த நிலையில், தற்போது பொன்முடி அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். திமுகவைச் சேர்ந்த ஓர் அமைச்சர் ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, அமைச்சர் பதவியை […]
