புதுடெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலத்தை ராகுல் காந்தியின் யாத்திரையில் இருந்து நீக்கியது ஏன் என காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் மகேஷ் ஜெத்மலானி கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை(தெற்கு முதல் வடக்கு) பாரத்ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். இரண்டாம் கட்டமாக அருணாச்சல பிரதேசத்திலிருந்து போர்பந்தர் (குஜராத்) வரையாத்திரை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்திருந்தார்.