"இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை…" – புதுச்சேரி சம்பவம் குறித்து யுவன் சங்கர் ராஜா

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்திற்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சிறுமியின் கொலை தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அதில், “இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்னையாக இருக்கிறது. 28.9% குழந்தைகள் ஏதோ ஒரு வகையான பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர். குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch பற்றிக் கண்டிப்பாக சொல்லிதர வேண்டும்.

நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு நற்குணங்களைப் போதித்து வளர்ப்பதும் அவசியம். புதுச்சேரி சிறுமியைக் கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பல தீமைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்பது புரிகிறது. பாதுகாப்பான நாடாகவும், ஒன்றுபட்ட சமூகமாகவும் வளர்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.