உ.பி.,க்களின் குட்புக்கில் செந்தில் பாலாஜி… கோவையில் கிடைச்ச செம சர்ப்ரைஸ்!

தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வருகிறார். இவர் இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஆதரவாளர்கள்,

கட்சியினர், பொதுமக்கள் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையில் செந்தில் பாலாஜி நனைந்து கொண்டிருக்கிறார். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருந்து வருகிறார்.

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என வரிசையாக திமுக வெற்றி வாகை சூட செந்தில் பாலாஜி முக்கிய காரணமாக இருந்துள்ளார். இதையடுத்து கட்சியை பலப்படுத்தவும், அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கரூரை விட கோவையில் நேரம் செலவழிப்பது தான் அதிகம் என்று உடன்பிறப்புகளே பேசிக் கொள்கின்றனர்.

இதனால் செந்தில் பாலாஜியின் பிறந்த நாள் கோவையில் களைகட்டி வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன. அதில் செந்தில் பாலாஜியின் துறையை குறிப்பிட்டு “Happy Birthday மின்சார கண்ணா” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த போஸ்டர்கள் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் புகைப்படம், திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி மலர் கொத்து அளித்த புகைப்படமும் அமைந்துள்ளது.

இதுதவிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உட்பட கோவை மாநகர திமுக நிர்வாகிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை மாநகரின் உக்கடம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை திமுகவில் தொடங்கிய நிலையில் அதிமுகவிற்கு தாவினார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அணிகள் பிளவுபட்டதால் டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்தார். இதனால் எம்.எல்.ஏ பதவி பறிபோனது. பின்னர் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டது.

ஆனால் ஒருகட்டத்தில் அதிருப்தி அடைந்து மீண்டும் திமுகவில் இணைந்து கொண்டார். மாற்று கட்சியில் இருந்து வந்திருந்தாலும், இவரது செயல்பாடுகள் கட்சி தலைமையை பெரிதும் ஈர்த்தன. இதனால்

தலைமையில் ஆட்சி அமைந்ததும் அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.