8 வயது சிறுமி கொலை 14 வயது சிறுவன் கைது| Dinamalar

ராய்ப்பூர், சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூரில் வசிக்கும் 8 வயது சிறுமி, கடந்த 7ம் தேதி மாயமானாள். ஐந்து நாட்களுக்குப் பின், அருகில் இருந்த காட் டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டாள்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, பின் கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவம் மாநிலம் முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.