வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் நடத்திய சோதனையில் ரூ. 3 கோடி மதிப்பிலான யு.ஏ.இ. கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மும்பையிலிருந்த துபாய் செல்லும் பயணி ஒருவரிடம் சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய கம்பெனி பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் சில வெளிநாட்டு கரன்சிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
![]() |
அவை யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரக நாட்டு கரன்சி என தெரியவந்தது. கரன்சிகளை பதுக்கி வைத்திருந்த அந்த பயணி பெயர் லியாகத் அப்துல்லா என்பதும் தெரியவந்தது.. வெளிநாட்டு கரன்சியை பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்து வுருகின்றனர். அதன் இந்திய மதிப்பு ரூ. 3 கோடி என தெரியவருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
