நாடி நரம்பில் புகுந்து மயக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் மாமன்னன். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், படக்குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடி உள்ளது. மேலும் இப்படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஒரு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில் மாமன்னன் படத்தில் இடம்பெற்றுள்ள நெஞ்சமே நெஞ்சமே என்ற பாடல் குறித்து இயக்குனர் செல்வராகவன்ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாள் ஆயிற்று. தலைவா, நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கம் அதிசயம் இது என்று பதிவிட்டு அதை ஏ. ஆர். ரஹ்மானுக்கும் டேக் செய்துள்ளார். இந்தப் பாடலை விஜய் யேசுதாஸ் பின்னணி பாட, யுகபாரதி எழுதியுள்ளார் . அதேபோல் இந்த படத்தில் வடிவேலு பாடிய ராசா கண்ணு என்ற பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.