கல்லூரி விரிவுரையாளர்களுக்கு உயரும் ஊதியம்: அமைச்சர் பொன்முடி சொன்ன குட் நியூஸ்!

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று (ஜூலை 21) சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

“தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவரப்படும். 2023-24ஆம் கல்வியாண்டில் இருந்தே பொது பாடத்திட்டம் கலை அறிவியல் கல்லூரிகளில் அறிவிக்கப்பட்டுவிடும். புதிதாக ஏதேனும் பாடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த ஆண்டு அதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, 2024-25ஆம் கல்வியாண்டில் இருந்து நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்படுவதால், கல்லூரிகளிலிருந்து வேறு கல்லூரிக்கு மாறும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு உதவியாக இருக்கும்.

உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும்.

பொன்முடி வீட்டில் திடீர் ரெய்டு !

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், பாடங்கள் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பு பெறும் வகையில் அத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காலியாக உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கல்லூரிகளில் காலியாக இருக்கும் 4,000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.20 ஆயிரம், இனி ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.