Sindhu:கருணைக் கொலை செய்யச் சொல்லி கண்ணீர் விட்ட நடிகை அங்காடித் தெரு சிந்து மரணம்

வசந்தபாலனின் அங்காடித் தெரு படம் மூலம் பிரபலமானவர் சிந்து. சில படங்களில் நடித்த அவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது.

சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்ல
தனக்கு சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு கேட்டு வந்தார் சிந்து. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 2. 15 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 44.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

14 வயதில் சிந்துவுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். திருமணமான அதே ஆண்டு ஒரு பெண் பிள்ளையை பெற்றெடுத்தார். பின்னர் கணவருடன் பிரச்சனை ஏற்படவே குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

குழந்தையை வளர்க்க கஷ்டப்பட்டார் சிந்து. தனி ஒருத்தியாக பிள்ளையை வளர்க்க தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் பேட்டிகளில் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார் சிந்து. தன்னை கருணைக் கொலை செய்துவிடுமாறு பேட்டி ஒன்றில் கண்ணீர் விட்டார் சிந்து.

புற்றுநோயின் வேதனையுடன் வாழ கடினமாக இருக்கிறது. நானும் கஷ்டப்பட்டு, என்னை சுற்றி இருப்பவர்களையும் கஷ்டப்படுத்துகிறேன். இதற்கு என்னை கருணைக் கொலை செஞ்சுடுங்க என்று கண்ணீர் விட்டார்.

இந்நிலையில் சிந்து இறந்த செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். சிந்துவின் கடைசி பேட்டி குறித்து சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,

நான் தற்போதும் புற்றுநோயுடன் போராடி வருகிறேன். கடவுளே என்னை எடுத்துக் கொள். இல்லை என்றால் நிம்மதியாக வாழவிடு என்று தான் தினமும் கேட்டு வருகிறேன்.

புற்றுநோய்க்கு மருந்து இல்லை. எல்லாம் கண்துடைப்பே. மார்பு மீது சிறு கட்டி வந்தது. கொரோனா வைரஸ் பிரச்சனை காலத்தில் கட்டி வந்தது.

மருத்துவமனைக்கு சென்றபோது அது நீர்க்கட்டி என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு ஒரு பெரிய ஊசியை மார்பில் குத்தி அங்கு இருக்கும் சதையை எடுத்து சோதனை செய்தார்கள். அப்படி செய்தது தான் பெரிய தப்பு. ஒரே வாரத்தில் கட்டிகள் பரவியது. அதில் இருந்து நீர் வந்து வலிக்கத் துவங்கியது.

நண்பர் ஒருவர் மூலம் மருத்துவரை அணுகினேன். எடுத்த எடுப்பிலியே புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய மாட்டார்கள். ஆனால் அவரோ கசாப்பு கடையில் கறியை வெட்டுவது போன்று என் ஒரு பக்க மார்பை அறுத்து எடுத்துவிட்டார்.

இரவு நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. 20 நிமிடங்களுக்கு மேல் உட்கார முடியவில்லை. நுரையீரலில் தண்ணீர் ஏறிவிட்டது. அண்மையில் தான் மூன்று லிட்டர் வரை தண்ணீரை வெளியே எடுத்தார்கள்.

10 நாட்களுக்கான மாத்திரைகளுக்கு மட்டும் ரூ. 6,500 செலவாகிறது. பேம்பர்ஸ் வாங்க செலவாகிறது. மகள், தம்பியின் உதவியுடன் தான் பாத்ரூம் செல்ல வேண்டியிருக்கிறது.

படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை வைத்து பிறருக்கு உதவி செய்துவிட்டேன். உறவினர்கள் உதவி செய்யவில்லை. அவசரத்திற்கு காசு வாங்கினால் அதை திருப்பிக் கொடுக்க தாமதமானால் கேவலமாக பேசுகிறார்கள்.

Jailer: நாய், காக்கானு விஜய்யை பத்தி ரஜினி சொல்லவே இல்ல: ஆதாரம் இதோ

ஒரு மாதத்திற்கு முன்பு என் அக்கா மகள் சாபமிட்டாள். இப்போ கேன்சர் வந்திருக்கு, அடுத்தடுத்து நிறைய நோய் வந்து 10 நாளில் செத்துப் போவ என சாபம் விடப்பட்டது. கஞ்சியை தவிர வேறு எதுவும் சாப்பிட முடியவில்லை.

இப்படி எல்லாம் வாழ்வதை விட இறப்பதே மேல். இரண்டு மார்புக்கும் புற்றுநோய் வந்துவிட்டது. சிகிச்சை செய்ய பணம் இல்லை என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.