இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து – உணவுல விஷம் வச்சிருவாங்க.. பகீர் கிளப்பிய மனைவி!

சிறையில் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு வீட்டு உணவு வழங்க வேண்டுமெனவும் அவரது மனைவி பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் தெஹ்ரிக் இ சாஹிப் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். 2018ஆம் ஆண்டு மிகப்பெரிய எழுச்சியுடன் ஆட்சியைப் பிடித்த இம்ரான் கான், 2022ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் ஆட்சியை இழந்தார். அதன்பிறக இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டு பிரமுகர்களிடம் பெற்ற அரசு பரிசுகளை விற்றது தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் இம்மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட அவர் பஞ்சாப் மாகாணம் அட்டாக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிகினி உடையில் வரவேற்பு… வீட்டில் உல்லாசம்… மாடல் அழகியின் ஆசைவலையில் சிக்கிய தொழிலதிபர்கள்..

இந்த நிலையில் இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீவி பஞ்சாப் மாகண உள்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “ஆக்ஸ்போர்டு பட்டதாரியான இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராகவும், கிரிக்கெட் அணி கேப்டனாகவும் இருந்துள்ளார். அவரின் சமூக மற்றும் அரசியல் அந்தஸ்தின் நிலை கருதி சிறையில் ‘பி’ வகுப்பு வசதிகள் வழங்க வேண்டும். சிறை விதிகளின் அடிப்படையில் இம்ரான் கானுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்கவும், தனி மருத்துவர் பரிசோதனை செய்யவும் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ராவல்பிண்டி அடிலா சிறைக்கு இம்ரான் கானை மாற்ற வேண்டும் என்கிற இஸ்லாமாபாத் நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக்காட்டிய அவர், இது இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும் அவரை அட்டாக் மாவட்ட சிறையில் வைத்திருப்பது நீதியானது இல்லை எனவும், அவரை அடிலா சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்

ஸ்டைலா, கெத்தா, மாஸா… லடாக் பைக் ட்ரிப் சென்ற ராகுல்.. 2கே கிட்ஸுக்கே போட்டியா?

சிறையில் தனது கணவரின் பாதுகாப்பு குறித்தும் கவலைகள் தெரிவித்த புஷ்ரா பீவி, . “இம்ரான் கான் உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளது. அட்டாக் சிறையில் அவர் விஷம் வைத்துக் கொல்லப்படலாம் என்ற அச்சமும் உள்ளது” என்றார். சிறை விதிகளின்படி அவருக்கு அனைத்து வசதிகளும் 48 மணி நேரத்திற்குள் செய்துத் தரப்பட வேண்டும் என்றும், ஆனால் 12 நாட்களாகியும் இதுவரை எந்த வசதியும் தரப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.