
இந்தியா – பாக்., போட்டி: மைதானத்தில் வந்தே மாதரம் பாடிய நடிகர் சதீஷ்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான போட்டி நேற்று (அக்.,14) ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியை காண ஏராளமான அரசியல் தலைவர்களும், நடிகர், நடிகைகளும் குவிந்தார்கள்.
தமிழ் நடிகர்களில் நடிகர் சதீஷும் இந்த கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்துள்ளார். அப்போது பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதைக் கொண்டாடும் விதமாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கானோர் வந்தே மாதரம் பாடலை பாடி உள்ளார்கள். அப்போது நடிகர் சதீஷூம் சேர்ந்து அந்த பாடலை பாடியுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.