சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக புகார் மனு – அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புதல்: தங்கள் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க பல்வேறு நாடுகள் தடை

போர் தீவிரமடைந்துள்ள சூழலில் பெலாரஸின் கோமெல் நகரில் ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதனிடையே, சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் அரசு புகார் மனு அளித்துள்ளது. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரான கார்கிவ்வை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவம் … Read more

முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் முதல் பாகம்: சென்னையில் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனதுவாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் இம்மாதஇறுதியில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் நடந்த சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் அறிவித்திருந்தார். இந்த நூலில் அவரின் 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இளமைக்காலம், பள்ளிப் படிப்பு, … Read more

இந்தியாவின் பழங்கால சிலைகள், கலைப் பொருட்கள் மீட்கப்படுகின்றன – அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

‘‘அனைத்து துறைகளிலும் பெண்கள் தலைமையேற்று வருகின்றனர். வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட இந்தியாவின் அரிய கலைப் பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன’’ என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வானொலியில் 86-வது ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றியதாவது: நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவிய போது, நமது விஞ்ஞானிகள் மிக வேகமாக அதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து வழங்கினர். அதற்காக அவர் களைப் பாராட்டுகிறேன். தற்போது நாடு முழுவதும் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்று … Read more

உக்ரைனில் மக்களுக்கு உதவும் இஸ்கான் கிருஷ்ணர் கோயில்

உக்ரைனில் போர் தாக்குதலால் சிக்கிய மக்களுக்கு உதவுவதற்காக தனது கோயில் கதவுகளைஇஸ்கான் கிருஷ்ணர் கோயில் நிர்வாகம் திறந்துவிட்டுள்ளது. இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயில் துணைத்தலைவர் ராதாராமன் தாஸ் கூறியபோது, ‘‘உக்ரைனில் உள்ள பல்வேறு இஸ்கான் கோயில் வளாகங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன. ஆபத்தில் சிக்கியுள்ள மக்கள் எந்த நேரத்திலும் கோயில் வளாகத்துக்குச் சென்று உதவியைப் பெறலாம். அங்கு உதவி செய்யபக்தர்களும், கோயில் ஊழியர்களும் காத்திருக்கின்றனர். மக்கள்சேவைக்காக கோயில் கதவுகள்எந்நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கீவ் உள்ளிட்ட நகரங்களில் … Read more

சமூக நீதிப் பயணத்தின் முதற்கட்ட முயற்சிதான் சமூக நீதிக் கூட்டமைப்பு: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் 

சென்னை: சமூகநீதிப் பயணத்தில் தமிழகத்தைக் கடந்து, இந்திய ஒன்றியம் முழுவதும் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முதற்கட்ட முயற்சிதான் அனைத்து இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தமிழக மக்கள் இமாலய வெற்றியை , மகத்தான தீர்ப்பினை மனப்பூர்வமாக அளித்து நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் … Read more

மணிப்பூர் மாநில வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது பாஜக: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை பாஜக அமைத்துக் கொடுத்துள்ளது என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மணிப்பூர் சட்டப்பேரவைக்கு வரும் 28 மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு தலைநகர் இம்பாலில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மணிப்பூர் மாநிலம் … Read more

'நான் தான் ரஷ்யாவின் நம்பர் 1 டார்கெட்; 2-வது இலக்கு என் குடும்பம்' – உக்ரைன் அதிபர்

கீவ்: ‘நான் தான் ரஷ்யாவின் நம்பர் 1 டார்கெட்; 2-வது இலக்கு என் குடும்பம்’ என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி. போர் முற்றியுள்ள சூழலில், ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ அவரது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், “உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. 2-வது நாளாக தாக்குதல் நடக்கும் சூழலில் உலக நாடுகள் அனைத்தும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நாங்கள் தனித்து போராடிக் கொண்டிருக்கிறோம். உலக நாடுகள் எங்களுக்கு … Read more

திண்டுக்கல் சேவல் கண்காட்சியில் வலம் வந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான சேவல்  

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சியில் மூன்று லட்சம் மதிப்பிலான சேவல் உள்ளிட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேவல்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றன. திண்டுக்கல்லில் உலக அசில் ஆர்கனைசேஷன், அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில் கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி ஏழாவது ஆண்டாக இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. … Read more

சம்ஸ்கிருத பல்கலை. மாணவர் அமைப்பு தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

கொச்சி: கேரள மாநிலம் காலடியில் ஸ்ரீ சங்கராச்சார்யா சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பு யூனியன் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பல்கலைக் கழகத்தில் பயிலும் திருநங்கை நாதிரா மெஹ்ரீன் சேர் மன் பதவிக்கு போட்டியிடுகிறார். அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் (ஏஐஎஸ்எஃப்) சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். ஏஐஎஸ்எஃப் மாநிலக் குழு உறுப்பினராக கடந்த 3 ஆண்டுகளாக இருக்கும் திருநங்கை நாதிரா, ஏற்கெனவே 2019-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். … Read more

'மெட்ரோ ரயில் நிலையத்தில் 30 மணி நேரமாக தஞ்சம்… எங்களை பிரதமர் மோடி மீட்க வேண்டும்' – உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள்

டெர்னோபில்: உக்ரைன் மீதான் ரஷ்ய தாக்குதல் இன்று இரண்டாவது நாளாக உக்கிரமடைந்துள்ள நிலையில், தெருவெங்கும் சைரன்களை ஒலித்து மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உக்ரைன் அரசு வலியுறுத்தியுள்ளது. உக்ரைனில் கல்வி நிமித்தமாக தங்கியுள்ள 20,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மீட்பதில் இந்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. நேற்றிரவு ரஷ்ய அதிபருடன் பேசிய இந்தியப் பிரதமர் மோடி, இந்தியர்களை குறிப்பாக இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், அங்குள்ள இந்திய … Read more