எல்லையில் பதற்றம் நீடிப்பு: ரஷ்யா-உக்ரைன் ராணுவம் தீவிர போர் பயிற்சி

மாஸ்கோ: ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர விரும்புகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷியா உக்ரைனை நேட்டோ படையில் சேர்க்கக் கூடாது என்று அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறது. மேலும் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என்று தெரிவித்துள்ள அமெரிக்கா ரஷியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனை தாக்கினால் கடும் … Read more

அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க. ஆதரவு- மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- தங்களின் 3-2-2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, கவர்னர் தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக் கட்சித் … Read more

திருப்பதியில் 15-ந்தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்க ஏற்பாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 15-ந் தேதி முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் ஜவகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த மாதம், பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. 15-ந் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இலவச … Read more

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்தது

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்காவில் பரவிய பிறகு கொரோனா பாதிப்பு வெகுவாக உயரத் தொடங்கியது. ஆயிரக்கணக்கில் இருந்த தினசரி பாதிப்பு திடீரென்று லட்சக்கணக்காக அதிகரித்தது. சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கும் உள்ளானார்கள். இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் 9 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த இரு மாத காலத்தில் … Read more

அரசியல் சட்ட கடமையை கவர்னர் செய்யவில்லை- அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை சட்டசபை அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்திட வேண்டும் என்பதில் நாம் அனைவருமே ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதையொட்டித்தான் ஒற்றுமையாக பல்வேறு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்து கொண்டு வருகிறோம். நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்த மாநிலம்தான் நம்முடைய தமிழ்நாடு. 2006-ல் … Read more

காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் இல்லை

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. காரை தனியாக ஓட்டி செல்பவர்கள் முக கவசம் அணியாமல் சென்றால் அவர்களை அதிகாரிகள் மடக்கி பிடித்து அபராதம் விதித்து வந்தன இதற்கு டெல்லி வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் டெல்லி ஜகோர்ட்டும் பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு … Read more

கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்த 410 பவுண்ட் தங்கக்கட்டியை பூங்காவில் வைத்த நபர்

வாஷிங்டன்: தங்கம் விற்கிற விலையில் பெரும்பாலான மக்கள் சொந்தமாக சில கிராம்களில் தங்கத்தை வாங்குவதற்கே அரும்பாடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில், பணக்காரர்களே வாயைப் பிளக்கும் அளவிற்கு அமெரிக்காவில் ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த நிக்லஸ் காஸ்டெல்லோ (43) என்ற கலைஞர் ஒரு தங்க கன சதுரத்தை வடிமமைத்துள்ளார். இவர் காஸ்டெல்லோ காயின் கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்துவதற்காக இந்த தங்க கன சதுரத்தை உருவாக்கியுள்ளார். இந்த தங்கக்கட்டியை சுமார் 410 பவுண்டு எடையில் 24 கேரட் … Read more

புத்தக கண்காட்சிக்கு நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்ததால் ஜனவரியில் நடைபெற இருந்த புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி 45-வது புத்தக கண்காட்சி வருகிற 16-ந்தேதி முதல் மார்ச் 6-ந்தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் நடக்கிறது. 500 பதிப்பாளர்களுடன் 800 அரங்குகளில் நடக்கும் புத்தக கண்காட்சியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி … Read more

இந்துபுரம் தலைமையில் மாவட்டம் அறிவிக்கக்கோரி நடிகர் பாலகிருஷ்ணா மவுன விரத போராட்டம்

திருப்பதி: ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆந்திராவில் உள்ள மாவட்டங்கள் பரப்பளவில் பெரியதாக இருப்பதால் பல்வேறு நிகழ்வுகள் சம்பந்தமாக மாவட்ட தலைநகருக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் நிர்வாக வசதிக்காக ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களை இரண்டாக பிரிக்க வேண்டும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி … Read more

நெதர்லாந்தில் எச்.ஐ.வி. வைரசில் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு

ஆம்ஸ்டர்டாம்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த வைரஸ் உருமாற்றங்கள் அடைந்து தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. வைரசில் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது. நெதர்லாந்து நாட்டில் எச்.ஐ.வி. வைரசின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது எச்.ஐ.வி. வைரசின் மிகவும் கொடிய மாறுபாடாகும் என்று தெரிவித்துள்ளனர். … Read more