#BREAKING : பிரபல தமிழ் நடிகர் காலமானார்..!!

பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் செவ்வாழை ராசு. இவர் கந்தசாமி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான ராசு, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு செவ்வாழை ராசு என அழைக்கப்பட்டார்.நான் சிவப்பாக இருந்ததால் செவ்வாழை ராஜு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அப்படி தான் எனக்கு இந்த பெயர் வந்தது. எங்கள் குடும்பம் விவசாயம் குடும்பம். நாங்கள் ஆரம்பத்தில் விவசாயம் தான் செய்து கொண்டிருந்தோம் என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.  இந்நிலையில், இன்று … Read more

#BREAKING : கர்நாடக முதல்வரை அறிவித்தது காங்கிரஸ்..!!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் முதல்வர் பதவி தொடர்பாக இழுபறி நீடித்துவந்தது. இருவரும் டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினர். அதைத்தொடர்ந்து, ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை மேற்கொண்டார். கடந்த 3 நாட்களாக முதலமைச்சரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்ட நிலையில், நிலையில், இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக … Read more

#JUST IN : கர்நாடகா முதலமைச்சர் இவர் தான் – காங்கிரஸ் தலைமை அறிவிப்பு..!!

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “காங்கிரஸ் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சி, கருத்து ஒற்றுமை அடிப்படையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒரே நேரத்தில் பதவி ஏற்றுக்கொள்வார்கள். பெங்களூருவில் இன்று மாலை 7.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் காங்கிரசின் சொத்து. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக பிரச்சாரம் செய்த … Read more

ஆந்திரா அருவியில் குளிக்கச் சென்ற சென்னை இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலி…!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரத்தில், பூபதியேஸ்வர கோனா அருவி உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள இந்த அருவியில் குளிக்க, தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் செல்வது வழக்கம். அதன்படி சென்னையில் இருந்து இளைஞர்கள் 5 பேர், கோனா அருவிக்குச் சென்றுள்ளனர். அவர்கள், அங்குள்ள பாறையில் ஏறி தண்ணீரில் குதித்துள்ளனர். அப்போது நீண்ட நேரமாகியும் 3 பேர் வெளியே வராததால் சக நண்பர்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ … Read more

கர்நாடகாவின் புதிய முதல்வர் துணை முதல்வர் பெயர்கள் அறிவிப்பு..!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது காங்கிரஸ். இந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த மறுநாளே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. மேலிட பார்வையாளர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோரின் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலிட பார்வையாளர்கள், ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் தனித்தனியாக கருத்துகளை … Read more

வனத்துறை சார்பில் யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது..!!

வனத்துறை சார்பில் யானைகள் கணக்கெடுப்புப் பணி அவ்வப்போது மேற்கொள்ளப்படும். அந்த வகையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, கூடலூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, தேனி, அம்பை, களக்காடு, கன்னியாகுமரி, நெல்லை, ஈரோடு, சத்தியமங்கலம், ஹசனூர், சேலம், தருமபுரி, ஓசூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கொடைக்கானல் என மொத்தம் 26 வனக் கோட்டங்கள் … Read more

பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று போட்டிகள் வரும் 23, 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள பிளே ஆப் சுற்று போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. Source link

சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்த பிரபல நடிகை!!

புஷ்பா படம் மற்றும் அதில் நடித்த ரஷ்மிகா மந்தனா குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஐஷ்வர்யா ராஜேஷ், அதில் தாம் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம், பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகை ராஷ்மிகா ‘ஸ்ரீவள்ளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. மேலும் … Read more

#BREAKING: ஹிந்துஜா குழும மூத்த நிர்வாகி எஸ்.பி.ஹிந்துஜா லண்டனில் காலமானார்..!

டாடா, அம்பானி, பிர்லா உள்ளிட்ட இந்தியாவின் பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்த பாரம்பரிய நிறுவனங்களில் ஒன்று ஹிந்துஜா குழுமம். அதன் தலைவரும் குழுமத்தை கட்டியாளும் ஹிந்துஜா சகோதரர்களில் மூத்தவருமான எஸ்.பி.ஹிந்துஜா இன்று காலமானார். இக்குழுமத்தின் சகோதரர்களில் ஒருவரான ஸ்ரீசந்த் பரமானந்த், வயது முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். Source link

ரஜினிக்கு வில்லனாகும் நடிகர் விக்ரம்!!

ரஜினிகாந்தின் 170ஆவது படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது அவரது மகள் இயக்கும் லால் சலாம் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இந் நிலையில் ரஜினிகாந்த் – ஞானவேல் கூட்டணியில் … Read more