தமிழக பக்தர்கள் சென்ற பேருந்தில் தாவி ஏறிய நெடுஞ்சாலை கொள்ளையர்கள்..! பரபரப்பான சிசிடிவி காட்சி

கோவையில் இருந்து வட மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு பேருந்தில் சுற்றுலா சென்றுள்ள தமிழக பக்தர்களின் உடமைகளை குஜராத் அருகே ஓடும் பேருந்தில் தாவி ஏறிய கொள்ளையர்கள் திருடிச்செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சினிமாக்களில் வருவது போல இரு சக்கர வாகனத்தில் வந்து ஓடும் பேருந்தில் தாவி ஏறி கைவரிசை காட்டும் குஜராத் கொள்ளையர்கள் இவர்கள் தான்..! கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த … Read more

திட்டமிட்டபடி மேட்டூர் அணை 12-ஆம் தேதி திறக்கப்படும் – முதலமைச்சர் உறுதி

காவிரி பாசன மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் 96 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதால் மேட்டூர் அணை திட்டமிட்டப்படி வரும் 12 ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாயர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் கர்நாடகா அணைக் கட்டுவதை தடுப்பதில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக கூறினார். முன்னதாக, தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் உள்ள முதலை முத்துவாரி மற்றும் விண்ணமங்கலத்தில் உள்ள வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். … Read more

தண்ணீர் தொட்டிக்குள் குளித்த சிறுமிகளை தீண்டிய நாகப்பாம்பு..! தாய் இறந்த 50 வது நாளில் சோகம்

மதுரை திருமங்கலம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த பாம்பு கடித்து சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது சகோதரியான மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தாய் உயிரை மாய்த்த நிலையில் அந்த குடும்பத்தை துரத்தும் துயரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மனைவி நாகலட்சுமி, 100 நாள் வேலைதிட்ட பொறுப்பாளராக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் … Read more

ஓடும் காரை வழிமறைத்து ரூ.1.5 கோடி கொள்ளை.. 2 பேர் கைது

நெல்லையில் ஓடும் காரை வழிமறைத்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில்  2 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுனைச் சேர்ந்த நகை வியாபாரி சுஷாந்த் என்பவர் கேரளாவில் உதவியாளருடன் காரில் சென்றபோது மூன்றடைப்பு அருகே மர்ம கும்பல் ஒன்று அவரை தாக்கி பணத்தை  கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களின்   அலைபேசி சிக்னலை வைத்து காரில் சென்ற கொள்ளையர்களை தனிப்படை போலீசார் பின் தொடர்ந்தனர். இறுதியாக கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பூப்பாறை … Read more

சினிமா பிரமுகரின் கார்மோதி துணை நடிகர் பலி.. கார் ஏற்றிக் கொலை என புகார்..! போதையன் சொன்ன கதை என்ன ?

சென்னையில் குடித்து விட்டு கார் ஓட்டிய சினிமா பிரமுகருக்கு, போலீஸ் வாகன சோதனை குறித்து தகவல் சொல்வதற்காக முன்னால் இரு சக்கரவாகனம் ஓட்டி சென்ற துணை நடிகர், அந்த குடிகார கூட்டாளியின் கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மனைவியும் , 2 வயது மகளும் , பெற்றோரும் உற்றாரும் தவிக்க… ராகவா லாரன்ஸ் நிறுவன மேலாளர் பழனியப்பன் போதையில் ஓட்டிச்சென்ற கார் மோதி பலியான துணை நடிகர் சரண்ராஜ் இவர் தான்..! சென்னை … Read more

இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கியது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்..!

கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இருப்பினும் அவருக்கு பல்வேறு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்திய வழக்கறிஞர் அண்மையில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் … Read more

நம்பர் பிளேட் இல்லாத டாரஸ் லாரி ஸ்கூட்டர் மீது மோதி விபத்து.. 3 மாத கர்ப்பிணியாக இருந்த பெண் உயிரிழப்பு..!

மீஞ்சூர் அருகே நம்பர் பிளேட் இல்லாத டாரஸ் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற 3 மாத கர்ப்பிணி, கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த அஜித் – ஐஸ்பிரியா தம்பதிக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணமான நிலையில், ஐஸ்ப்ரியா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை பட்டமந்திரி பகுதியில் இரும்பு சேகரிக்கும் வேலையை முடித்துவிட்டு இருவரும் டி.வி.எஸ் ஸ்கூட்டரில் மீஞ்சூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது சாம்பல் கழிவுகளை ஏற்றிக் கொண்டு … Read more

விருத்தாசலத்தில் வீதி உலா வந்த சப்பரம் மரக்கிளையில் மோதி கீழே கவிழ்ந்து விபத்து..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வீதி உலா வந்த சப்பரம் மரக்கிளையில் மோதி கீழே கவிழ்ந்தது. தெற்கு பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, சப்பரம் வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவின்போது சாலையோரம் இருந்த மாமர கிளையில் சப்பரம் மோதி கீழே கவிழ்ந்தது. இந்த விபத்தில் சப்பரத்தை தள்ளிக்கொண்டு சென்ற, நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்த வினோத்குமார் காயமடைந்ததையடுத்து, விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கவிழ்ந்த சப்பரத்தை அங்கிருந்தவர்கள் … Read more

சாம்பல் புகையை வெளியேற்றி வரும் மயோன் எரிமலை.. வெடிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

பிலிப்பைன்ஸில் உள்ள மயோன் எரிமலை சீறி வருவதால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மணிலாவிலிருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மயோன் எரிமலை தொடர்ச்சியாக சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது. அடுத்த சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ, எரிமலை வெடித்து நெருப்புக் குழம்பு வெளியேற வாய்ப்பு இருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். 5 ஆண்டுகளுக்கு முன், மயோன் எரிமலை வெடித்த போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Source … Read more

அவசர உதவிக்கு கொடுத்த பணம், நகையை திருப்பி தராததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அவசர உதவியாக பக்கத்து வீட்டில் குடியிருந்தவருக்கு கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பிக் கேட்டும் தராத விரக்தியில் இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்த குமார் என்பவர் 2015 ஆம் ஆண்டு குடும்பத்துடன் காமராஜர்புரம் பகுதியில் குடியிருந்தபோது, அதே காம்பவுண்டில் வசித்த லட்சுமி என்பவரின் குடும்பத்தினருடன் உறவினர்கள் போன்று பழகியுள்ளனர். அதன் காரணமாக, 10 சவரன் நகைகள் மற்றும் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் … Read more