'இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்' – அல்கொய்தா மிரட்டல்

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகத்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’  செய்து பாஜக உத்தரவிட்டது. எனினும் மத்திய பாஜக அரசு மீது பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் … Read more

'விக்ரம்' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போதே பற்றி எரிந்த தியேட்டர் ஸ்கிரீன்!

புதுச்சேரியில் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டரின் திரை திடீரென தீப்பற்றி எரிந்ததால், படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு தியேட்டரை விட்டு வெளியேறினர். புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் உள்ள ஜெயா திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது, திரையின் ஒரு பக்கத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலயறியடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு வேகமாக வெளியேறினர். இதனால் … Read more

ஆயிரம் ஆயிரமாய் சீர்விரிசை: விமர்சையாக தொடங்கிய ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழா

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற காரைக்கால் திருபட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. காரைக்கால் மாவட்டத்தில் அதிக அளவாக 108 கோயில்கள் 108 குளங்கள் அமைந்த பெருமை திருமலைராயன் பட்டினத்திற்கு உள்ளது. இந்நிலையில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடல்வழியாக ஒரு பேழையில் வந்த அம்மனையும், அதிலிருந்த ஓலைச் சுவடியையும் பின்பற்றி ஆயிரங்காளியம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுகிறது. இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் எந்த ஒரு பொருளும் ஆயிரம் எண்ணிக்கையில் … Read more

ஆம்பூர்: சாலையில் பழுதாகி நின்ற காரை தள்ளியபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற காரை தள்ளிக் கொண்டு சென்றபோது தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சமியுல்லா. இவர் தனது நண்பர் நவாஸ் உடன் சென்னை சென்று ஆம்பூர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சின்ன கொமேஸ்வரம் என்ற இடத்தில் கார் பழுதாகி நின்றதால் அங்கிருந்து சுமார் 1கிலோ மீட்டர் தூரம் காரை தள்ளிக் கொண்டு வந்தனர். அப்போது கார் திடீரென … Read more

ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – ஒவைசி கட்சி எம்எல்ஏ மகன் கைது

ஹைதராபாத்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி எம்எல்ஏவின் மகன் கைது செய்யப்பட்டு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த வாரம் 17 வயது சிறுமி ஒருவர் தனது தோழியுடன் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த சில சிறுவர்கள் அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமி அங்கிருந்து வெளியே செல்ல முயன்றிருக்கிறார். ஆனால், … Read more

சேலம்: போலீசாரிடம் சிக்காமல் இருக்க ரவுடிக்கு உதவியதாக சிறை வார்டன்கள் இருவர் சஸ்பெண்ட்

தனிப்படை போலீசாரிடம் சிக்காமலிருக்க பிரபல ரவுடிக்கு உதவி செய்த சேலம் மத்திய சிறை வார்டன்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வசந்த், குற்ற வழக்கில் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ரவுடி வசந்த் ஜாமீன் பெற்று வெளியே வரவிருந்த நிலையில், வேறொரு வழக்கில் வசந்த்தை கைது செய்ய தனிப்படை போலீசார் சேலம் மத்திய சிறை முன்பு காத்திருந்த்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரம் முடிந்த பின்பும் … Read more

ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரி சோதனை

நாடு முழுவதும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

முதல்வர் குறித்து தொடர் அவதூறு – சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

முதல்வர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் முதல்வர் குறித்து மீண்டும் அவதூறாக பேசியதால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டார். மேலும் ஒப்பந்த விதிகளை மீறி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சமூக வலைதள … Read more

’விரைவில் அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர்’.. இபிஎஸ்-க்கு ஆதரவான போஸ்டரால் பரபரப்பு

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து என சுவரொட்டி ஒட்டி நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் புகார் அளித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ளார் என ஓ.பன்னீர்செல்வம் வீட்டு அருகே சுரேஷ் என்ற நபர் ஒட்டிய சுவரொட்டியால் நேற்று அதிமுக நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேனி மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் … Read more

குறைந்த முதலீடு! அதிக வட்டி! ஆசை யாரை விட்டது? படித்தவர்களும் பணத்தை பறிகொடுக்கும் அவலம்!

மோசடிப் பேர்வழிகளை கைது செய்து சிறையில் தள்ள முடியுமே ஒழிய, காசு திரும்ப கிடைக்க வாய்ப்பு மிக மிக குறைவே! ஒரு ரூபாய்க்கு 40-60 பைசா கிடைப்பதே அரிது என்பதால் துவக்கத்திலே கவனமாக இருப்பது அவசியம் குறைந்த முதலீடு… அதிக வட்டி… என்ற ஆசை யாரை விட்டது?… அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த நிறுவனங்களைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும், ஏமாறும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து கொண்டேதான் … Read more