சென்னையில் மரக்கிளை முறிந்து விழுந்து பெண் காவலரின் கணவர் பலி.!

சென்னையில் மரக்கிளை முறிந்து விழுந்து பெண் காவலரின் கணவர் பலி.! சென்னையில் உள்ள கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சுகப்பிரியா. 4 மாத கர்ப்பிணியான இவர் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் ஆனந்தராஜ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.  இந்த நிலையில், சுகப்பிரியா கடந்த 13-ம் தேதி காலை தனது கணவர் ஆனந்தராஜ் உடன் இருசக்க வாகனத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக … Read more

தென்காசி : கல்குவாரியில் அத்துமீறி நுழைந்ததாக சீமான் உள்பட 75 பேர் மீது வழக்கு பதிவு.!

தென்காசி : கல்குவாரியில் அத்துமீறி நுழைந்ததாக சீமான் உள்பட 75 பேர் மீது வழக்கு பதிவு.! தேர்தல் பரப்புரை பயணத்தின் ஒரு அங்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் படி அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  இந்நிலையில் அவர் சங்கரன்கோவில் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சீமானிடம், சங்கரன்கோவில் பகுதியில் கல் குவாரிகளின் பெயரில் இயற்கை வளங்கள் … Read more

தொடர் மழையால் சென்னை – கோவை செல்லும் விமான சேவை பாதிப்பு.!!

தொடர் மழையால் சென்னை – கோவை செல்லும் விமான சேவை பாதிப்பு.!! வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.  இதற்கிடையே நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த … Read more

பகலில் 40 கி.மீ.. இரவில் 50 கி.மீ..!! வேகத்தை கூட்டினால் வழக்கு பாயும்..!! சென்னை போலீசார் எச்சரிக்கை..!!

சென்னை சாலைகளில் பகலில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கும், இரவில் 50 கிலோமீட்டர் வேகத்திற்கும் மேல் வாகனங்களை இயக்கினால் தானியங்கி முறையில் வழக்கு பதிவு செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால் எச்சரித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால் காவல்துறையினருக்கு பல்வேறு உபகரணங்களை வழங்கியதோடு கூகுள் ட்ராபிக் அலர்ட் செயலியை தொடங்கி வைத்தார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “சென்னையில் பகலில் 40 கிலோ … Read more

கடலூர் | நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்! ஒடிசா ரயில் விபத்தை கண் முன் நிறுத்திய கொடூரம்! 

கடலூர் : மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் துர்கா, சுகம் என்றதனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடூர விபத்தில், இரு பேருந்துகளும் நிலைகுலைந்து, 4 பேர் பலியாகியுள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். துர்கா என்ற தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த துர்கா பேருந்து, எதிரே வந்த சுகம் என்ற தனியார் பேருந்து மீது அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 80-க்கும் … Read more

#கிருஷ்ணகிரி : மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 2 பேர் பலி, 2 பேர் படுகாயம்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தடிகல் பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவரது மகன் நாகராஜ் (25). இவர், அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான நாகேந்திரன், மற்றும் நாகராஜ் ஆகிய இரண்டு பேருடன் நேற்று தேன்கனிக்கோட்டையில் இருந்து தடிகல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்பொழுது பெங்களூருவை சேர்ந்த புகைப்பட கலைஞரான நவ்ரோஸ் (80) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் … Read more

நீதிபதி வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய பாஜகவினர்.‌. 43 பேர் மீது வழக்குப்பதிவு.!

நீதிபதி வீட்டின் முன்பு போராட்டம் நடந்த பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா, மதுரை எம் பி வெங்கடேஷனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் அடிப்படையில் பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவை போலீசார் கைது செய்து ரேஸ் கோர்ஸ் காலனியில் உள்ள … Read more

#சென்னை || கனமழையால் திருப்பி விடப்பட்ட 10 விமானங்கள்..!!

தெற்கு வங்க கடலில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.  குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த … Read more

குடிபோதையில் தகராறு செய்த தந்தை.. கட்டையால் தாக்கி கொலை செய்த மகன்.!

மதுபோதையில் தகராறு செய்த தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஆத்தங்கரைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 46). கூலி தொழிலாளியான இவரது மனைவி வசந்தா (வயது 40). இந்த தம்பதியினருக்கு சூர்யா (வயது 21) என்ற மகன் இருந்துள்ளார். இதில் தந்தை குமரேசன் தினம் குடித்துவிட்டு மனைவி வசந்தாளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.  இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் முடித்து … Read more

காரைக்குடி | திமுக ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த கும்பல் வெறிச்செயல்! பலியான இளைஞர்! 

பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை, திமுக ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த நேற்று காலை சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காவல்நிலையத்தில் கையெழுத்திட வினீத் என்ற இளைஞரை வழிமறித்து, ஸ்கார்ப்பியோ காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டியது.  அப்போது, வினீத்தின் நண்பன் நீண்ட வாளை (ஆயுதம்) எடுத்து, அந்த கும்பலை விரட்ட முயல, அவரையும் அந்த … Read more