#Breaking: கொள்ளிட ஆற்றில் 6 பேர் உயிரிழந்த விவகாரம்.! நிவாரணம் கேட்டு உறவினர்கள் கெடுபிடி.! 

தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மாலை தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்ய வந்த நிலையில் இரவு அங்கேயே தங்கினர்.  அதன் பின் அவர்களில் ஆறு பேர் மாதா கோவில் அருகே இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்பொழுது அணை திறக்கப்பட்டதால் தண்ணீரின் வேகம் அதிகரித்ததில் அவர்கள் திடீரென அடித்துச் செல்லப்பட்டனர்.  அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.8.3 கோடி மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல் – உகண்டா நாட்டு பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.8.3 கோடி மதிப்புள்ள போதை பவுடரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த சர்வதேச விமானத்தில் பயணம் செய்து உகாண்டா நாட்டை சேர்ந்த நம்பீரா நோலின் … Read more

தேனி || போடி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த தெற்கு இரயில்வே அதிகாரி!

போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவை! நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் இல்லாத மாவட்டங்களை இந்திய ரயில்வே பாதையுடன் இணைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. நிதி ஆயோக் குழுவானது இந்திய ரயில்வே வரைபடத்தில் இல்லாத மாவட்டங்களை கண்டறிந்து இந்திய ரயில்வே பாதையுடன் இணைக்கும் திட்டத்தை பரிந்துரைத்திருந்தது. மேலும் மீட்டர் கேஜ் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.  இத்திட்டத்தின் கீழ் போடிநாயக்கனூரில் இருந்து மதுரை செல்லும் மீட்டர் கேஜ் ரயில் பாதையை … Read more

ஏரிகளில் நீர் நிரம்பி வருவதை வேடிக்கை பார்க்க சென்ற ராணுவ வீரர் விபத்தில் பலி.!

தர்மபுரி மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரம்பி வருவதை வேடிக்கை பார்க்க சென்ற ராணுவ வீரர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் நந்தகுமார் (21). இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நந்தகுமார் சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து நேற்று ஏரிகளில் நீர் நிரம்பி வருவதை வேடிக்கை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் … Read more

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி போராட்டம்.. கோடியில் நஷ்டம்.. தனியார் நிறுவனம் அதிர்ச்சி.! 

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் வட்டம் திருமாந்துறை பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. இதனை தனியார் நிறுவனம் ஒப்பந்த முறையில் நடத்தி வருகின்றது.  இதில் பணியாற்றிய 28 பேரை அந்த தனியார் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இதை கண்டித்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்களும், அதே சுங்கச்சாவடியில் பணிபுரிகின்ற தொழிலாளர்களும் திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதுபோலவே, கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சியின் சுங்கச்சாவடியில் பணியாற்றிய 32 பணியாளர்கள் … Read more

கரூர் || மனைவியிடையே ஏற்பட்ட தகராறு.! கணவரின் விபரீத முடிவு.!

கரூர் மாவட்டத்தில் மனைவிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கரூர் மாவட்டம் ராயனூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி மணிவேல்(40). இவரது மனைவி விஜயலட்சுமி(37). இந்நிலையில் மணிவேலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் ஆடிக்கடி கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த மணிவேல் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து மணிவேலை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை … Read more

பேராசை.. புதையலை எடுக்க நரபலி.. சம்பவ இடத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி.! 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் லட்சுமணன் என்பவர் அந்த ஊரிலுள்ள வெற்றிலை தோட்டத்தில் ஒன்றரை அடி, ஆழக் குழியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் இறந்த குழிக்கு முன்பாக பாக்கு, வெற்றிலை, மஞ்சள், எலுமிச்சம் பழம் குங்குமம் உள்ளிட்ட பொருட்களும் மண்வெட்டி மற்றும் அறுத்த கோழி போன்றவையும் சிதரிக்கிடந்தன.  இதனைத் தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவரை கொன்றது அவரது நண்பர் மணி என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக லட்சுமணன் மற்றும் மணி இருவரும் சேர்ந்து புதையல் … Read more

நாளை முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு.. பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளது. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.  தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பூங்காவிற்கு வருகை … Read more

சேலம் || ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.!

சேலம் மாவட்டத்தில் ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சாமிநாயக்கன்பட்டி ஏ.ஆர். காலனி பகுதியை சேர்ந்த வேலு என்பவரது மகன் கபிசேனா(20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கபிசேனா நேற்று குளிப்பதற்காக நண்பர்களுடன் மாங்குப்பை ஏரிக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஏரியின் நடுப்பகுதிக்கு செல்வதற்கு அனைவரும் பரிசலில் சென்றபோது கபிசேனா தண்ணீரில் குதித்துள்ளார். பின்பு … Read more

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர்.. போக்சோவில் கைது.!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் பெண்கள் மீதான பாலியல் தொடர்பான சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.  இதில் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் ஆசிரியர்களை நம்பி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்புகின்றனர். ஆனால் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான மாணவிகள் இதனை வெளியில் … Read more