​பஞ்சாப் துப்பாக்கிச்சூ​டு: உயிரிழந்த ​தேனி ​ராணுவ வீர​ரின் உடல் தகனம்!

​தேனி ​மாவட்டம்,​ தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த​ தம்பதி ​ஜெயராஜ்-ரத்தினம்​.​ இவர்க​ளின் இளைய மகன்​ யோகேஷ்குமார் ​ 2019-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து தற்போது பஞ்சாபில் பணிபுரிந்து வந்தார். பஞ்சாப் ராணுவ முகாமில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் யோகேஷ்​​குமார் உள்பட 4 பேர் பலியானார் என இந்திய ராணுவம் உறுதி செய்திருக்கிறது. ராணுவ வீரர் உடல் ​முகாமில் உயிரிழந்த யோகேஷ்குமாரின் உடல் ​இறுதி சடங்கிற்காக  இன்று ​காலை ​​பஞ்சாப்பில் இருந்து மதுரை விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு … Read more

புதிய முதலீட்டாளர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்..!

முடிந்த 2022-23 நிதி ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காக 2.5 கோடி டீமேட் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக முதலீட்டை ஆரம்பித்திருக்கும் பலர் யாருடைய வழிகாட்டலும் இல்லாமல் சுயமாக பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலீடு பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரியாததால் பல்வேறு தவறுகளை செய்து வருகிறார்கள். கட்டாயம் தவிர்க்க வேண்டிய பத்து முக்கியமான முதலீட்டுத் தவறுகளை இங்கே பார்ப்போம். மணி … Read more

ரிப்பப்பரி விமர்சனம்: `இது என்னடா பேய்க்கு வந்த சோதனை!' மாஸ்டர் மகேந்திரனின் ஹாரர் படம் எப்படி?

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் சத்யராஜ், பாக்யராஜ், ராஜ் என்கிற மூன்று சேட்டைக்கார நண்பர்கள் ஊரில் லந்துச் செய்துகொண்டு திரிகிறார்கள். கதாநாயகன் பாக்யராஜின் காதலி இருக்கும் கோவை மாவட்டம் தலக்கரை கிராமத்தில், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்ய முயலும் நான்கு பேரை, தலையை வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்கிறது ஒரு பேய். இந்தப் பேயைப் பிடித்தே ஆக வேண்டும் என அலையும் கொடுமுடி இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தியும், காதலன் பாக்யராஜ் உட்பட மூன்று ராஜ்களும் சேர்ந்து அந்தப் பேயைப் … Read more

பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து: 18,000 க்கும் மேற்பட்ட பசுக்கள் பலி! – அமெரிக்காவில் சோகம்!

அமெரிக்காவின் தெற்கு மாநிலமான டெக்சாஸில் உள்ள பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் காயமடைந்தார். சுமார் 18,000 பசுக்கள்  இறந்ததாகக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கின்றனர். பண்ணையில் சிக்கியிருந்த ஒரு  பணியாளரைத் தீவிர போராட்டத்துக்குப்பிறகு மீட்டு  லுபாக் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த  தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. “பண்ணையில் அதிகளவு எருவை சேமித்து வைத்திருந்திருக்கலாம். அதனால் இந்த விபத்து நடந்திருக்கலாம். இந்த சோகத்திற்கான காரணம் மற்றும் உண்மைகளை அறிந்தவுடன், பொதுமக்களுக்கு … Read more

ருத்ரன் விமர்சனம்: பழங்கால திரைக்கதையில், அதைவிடப் பழைமையான ஒரு கதையில் ஓர் ஆதிகால சினிமா!

குடும்பம், காதல், வேலை என மகிழ்ச்சியாக வாழும் ருத்ரனின் குடும்பத்தின் மேல் ஒரு பெரிய கடன் வந்து விழ, அதிலிருந்து மீள வெளிநாட்டில் ஐடி வேலைக்குச் செல்கிறார் ருத்ரன். அதனாலேயே, ருத்ரனின் மொத்த குடும்பமும் வில்லன் ‘பூமி’யால் கொல்லப்படுகிறது. வில்லன் பூமி யார், அவர் ஏன் ருத்ரனின் குடும்பத்தைக் கொன்றார், பூமியை ருத்ரன் பழிவாங்கினாரா என்பதை எளிதில் யூகிக்கும்படியான மசாலா சினிமா டெம்ப்ளேட் காட்சிகளை வரிசையாக அடுக்கி, திரைக்கதை அமைத்திருக்கிறார் கே.பி.திருமாறன், அதற்குத் திரையில் உயிர் கொடுத்திருக்கிறார் … Read more

“சமூகத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் சாதி என்ற கட்டமைப்பு இருக்கிறது’'- கனிமொழி எம்.பி பேச்சு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள‌ திருமண மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘மாபெரும் தமிழ்கனவு தமிழ்மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி’ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமைத் தாங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ‘சமூக நீதி’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் `திசையும் திசைகாட்டியும்’ என்ற தலைப்பிலும் கருத்துரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், “அரசியல் தத்துவம், வணிகம், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் உள்ளிட்டவைகளில் … Read more

`ஸ்பைடர்மேன்’ பாகுலேயன்… 200 இடங்களில் கொள்ளையடித்த பலே கொள்ளையன் சிக்கியது எப்படி?!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நகரத்தில் மெடிக்கல் காலேஜ், சாக்கோ, பாப்பனங்கோடு, வஞ்சியூர் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் கொள்ளைகள் நடந்து வந்தன. போலீஸாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது வெள்ளையாணி பகுதியில் ஒருவர் ஸ்பைடர்மேன் வேடத்தில் பைக்கில் செல்வதும். அவர் பைக்கை ஓரிடத்தில் மறைவாக வைத்துக்கொண்டு கொள்ளையடிக்கச் செல்வதும். சிறிது நேரத்தில் கொள்ளையடித்த பொருள்களுடன் திரும்ப வந்து … Read more

Tamil News Live Today: திமுக ஃபைல்ஸ்: இன்று காலை 10.15 மணிக்கு திமுகவினரின் சொத்து, ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை!

இன்றுதிமுகவினரின் சொத்து, ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை! தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என முன்னரே அறிவித்திருந்தார். இந்த நிலையில், `தி.மு.க-வின் ஊழல் பட்டியல் இன்று காலை 10:15 மணிக்கு வெளியிடப்படும்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார். DMK Files April 14th, 2023 – 10:15 am pic.twitter.com/4Hlvq4l2G0 — K.Annamalai (@annamalai_k) April 13, 2023 … Read more