ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கு இலங்கை இராணுவக் குழு லெபனான் புறப்பட்டுச் சென்றது

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் (UNIFIL) உள்ள இலங்கை படை பாதுகாப்பு குழுவிற்கு (SLFPC) 125 பேரைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் 15வது குழு புதன்கிழமை (ஏப்ரல் 03) ஐ.நா பணிக்காக நாட்டை விட்டு வெளியேறியதாக இலங்கை இராணுவம் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் (மார்ச் 09) முதல் கட்டமாக ஐ.நா பணிக்காக சென்ற 12 இராணுவ வீரர்களை உள்ளடக்கிய 15வது SLFPC இன் முன்கூட்டிய குழுவை தொடர்ந்து இந்த குழு அங்கு சென்றுள்ளது … Read more

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் அத்தியாவசிய சேவைகளை சீராக செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகைள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்கள் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்குமான … Read more

பிரதமரின் தென்கொரிய விஜயம் நாட்டின் பல துறைகளுக்கு பல்வேறு நன்மைகள்….

தென் கொரிய மக்கள் குடியரசின் கியோங்சங்புக்-டு (Gyeongsangbuk-du) மாகாண ஆளுநர் லீ சியோல் வூ அவர்கள் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவை 2024.04.03 அன்று கியோங்சங்புக்-டு ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார். கல்வி மற்றும் உயர்கல்வி, விவசாயம், கடற்றொழில், பெண்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கு பெருமளவு உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதுடன், மேலும் பல திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர்கல்வி பெறாமல் பாடசாலைலை விலகிச் செல்லும் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான தகவல் … Read more

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 469 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஏப்ரல் 02 அதிகாலை நோரோச்சோலை மாம்புரி கடற்கரை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக கொண்டு வந்து போக்குவரத்துக்காக தயார் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 469 கிலோ 500 கிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு லொறி வண்டி (01) கைப்பற்றியுள்ளனர். கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல … Read more

முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய 2024.04.20ஆம் திகதி முதல் 2024.05.20ஆம் திகதி வரையான ஒரு மாத கால பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. மேலும், ஏதேனும் செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் அதை சட்ட ரீதியில் விளகிக்கொல்வதற்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 2. இந்த பொது மன்னிப்பானது 2024.04.02ஆம் … Read more

இலங்கையின் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் புதிய இலச்சினை வெளியீடு

இலங்கையின் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் புதிய இலச்சினை வெளியிடப்பட்டதுடன் அதன் பணிக்குழுவினருக்கான பாராட்டு சான்றிதழ்களும் வைக்கப்பட்டன. நாட்டில் மனித ஆட்கடத்தலை இல்லாதொழிப்பதில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி, அதன் அடையாளத்தை வலுப்படுத்தும் நோக்கில் அதன் அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்புடன் நேற்று (ஏப்ரல் 03) பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் உத்தியோகபூர்வ இலச்சினை வெளியிடப்படும் வரலாற்று நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பணிக்குழுவின் … Read more

யாழ்ப்பாணப் படையினர் தேவையுடைய இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிப்பு

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகப் படையினர் மனித நலனில் அக்கறை காட்டி வரணி பிரதேசத்தில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு இரண்டு புதிய வீடுகளை அமைத்துக் கொடுத்தனர். புதிய வீடுகள் 02 ஏப்ரல் 2024 அன்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. திறப்பு விழாவின் போது, வீட்டு சாவிகள் யாழ் பாதுகாப்புப் படைத் தலையைக தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சி.பி விக்ரமசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களால் குடும்பங்களுக்கு அடையாளமாக கையளிக்கப்பட்டன. மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், வடக்கு மாகாண … Read more

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு!

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை நான்காவது இடத்தில்

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பின்னர், 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை நான்காவது (4வது) இடத்தை அடைந்துள்ளது. 2023-2025 போட்டிகளில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள இலங்கை அணி, இரண்டில் வெற்றி பெற்று 24 புள்ளிகள் மற்றும் 50 வீத வெற்றி சதவீதத்துடன் 4வது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே 1, 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளன. நேற்று (03) பங்களாதேஷ் அணிக்கு … Read more

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு வரலாற்று வெற்றி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் தென்னாபிரிக்க மகளிர் அணிக்கும் இடையில் நடைபெற்ற வு20 தொடரில் இலங்கை மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட வு20 போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை மகளிர் அணி நேற்று (03) 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்க மகளிர் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்ததுடன் அவர்கள் தமது 20 … Read more