அரச சேவையிலிருந்து ஓய்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் இயங்கிவரும் பதிவாளர் நாயக கிழக்கு வலய அலுவலத்தின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய திருமதி.ரஞ்சினி சுந்தரலிங்கம் நேற்று (26) சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 1991 ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி அரச சேவையில் இணைந்த இவர், கொழும்பு பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் கடமையாற்றினார். 1991 ஏப்ரல் 1 ஆம் திகதி மட்டக்களப்பு காணி பதிவகத்திற்கு இடமாற்றம் பெற்று பின்னர் 2006 ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் பதிவாளர் நாயக … Read more

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தியவர் கைது

பாணந்துறை, எலுவில சந்தி பகுதியிலுள்ள கடையொன்றில் பாடசாலை மாணவர்களுக்கு புகையிலை கலந்த மாவா எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்த ஒருவர், சுமார் பத்து இலட்சம் பெறுமதியான மாவா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பாணந்துறை ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபரால் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் பத்து கிலோ மாவா போதைப்பொருள்; பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பாணந்துறை பகுதியில், பாடசாலை மாணவர்களும், பகுதி நேர வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களும் புகையிலை கலந்த மாவா எனப்படும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் … Read more

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நாளை முக்கிய போட்டி

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்த இரு அணிகளுக்கிடையில் நேற்று (26) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து இன்னிங்சின் போது மழைக் குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் விதிப்படி இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 111 ஓட்டங்களைஎடுக்க … Read more

மருந்து வகைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நேபாளத்தின் லும்பினி சர்வதேச பௌத்த அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் வணக்கத்திற்குரிய மைத்திரி தேரர் அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மருந்துப் பொருட்கள் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சர்வதேச லயன்ஸ் கழக 306 C 2 பலாங்கொடை கிளையின் கோரிக்கைப் பிரகாரம் இந்த மருந்துப் பொருட்கள் பலாங்கொடை … Read more

இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை இராஜாங்க அமைச்சர் சந்தித்தார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன், சமீபத்தில் இந்தியாயாவில் நடைபெற்ற “டெப்எக்ஸ்போ 2022” (DefExpo 2022) கண்காட்சியில் போது பல இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்தார். குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற ‘DefExpo 2022’ கண்காட்சிக்கு விஜயம் செய்த போது, இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சுமூக கலந்துரையாடலின் பின்னர் நிகழ்வைக் குறிக்கும் வகையில் இராஜாங்க அமைச்சரும் இந்திய பாதுகாப்பு செயலாளரும் நினைவுச் சின்னங்களை … Read more

ஏழாவது ஆயுள்வேத தின நிகழ்வுகள்

ஏழாவது ஆயுள்வேத தினத்தைமுன்னிட்டு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் “எங்கும் எந்நாளும் ஆயுள்வேதம்” என்ற தொனிப்பொருளில் இலங்கை பொலிசாருக்கான விசேட கண்காட்சி ஒன்றினை 2022 ஒக்டோபர் 22ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. சிறந்த ஆரோக்கியம் மற்றும் சிறந்த வாழ்க்கைக்காக, ஆயுள்வேதம் தொடர்பான விழிப்புணர்வினை பரப்புதல் இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கங்களாக அமைந்திருந்தன.  2.         இந்த கண்காட்சியில் இலங்கைக்கான பதில் இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ வினோத் கே … Read more

இலங்கையில் மின்சார பாவனையாளர்கள் அனைவரும் செலுத்தப்போகும் வரி! மின்வெட்டு நேரத்திலும் மாற்றம்

இலங்கையில் மின்சார பாவனையாளர்களிடம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை அறவிட இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் பயனாளர்களிடம் இந்த வரி அறவிடப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், அண்மையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி மின் பாவனையாளர்களிடம் அறவிடப்படுவதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் மின்சார கட்டணத்திற்கு சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியினை அறவிடாமல் … Read more

கடற்பரப்புகளில் வானிலை ,கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்குதிசையிலிருந்து அல்லது மாறுபட்ட  திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ … Read more

வடமாகாண ஆளுநரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்

சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வை பெற்றுகொடுக்கும் நோக்கில் வடமாகாண ஆளுநரினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் பி. வாகீசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: