எட்டாவது ஐசிசி உலக கிண்ண T20 போட்டிகள் இன்று ஆரம்பம்

எட்டாவது ஐசிசி உலக கிண்ண T20 போட்டிகள் இன்று (16 அக்டோபர்) ஆஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. அடுத்த மாதம் (நவம்பர்) 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள், மதிப்பீட்டின் அடிப்படையில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மீதம் இருக்கின்ற இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதிப் போட்டிகளில் … Read more

2022 ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண T20 போட்டி:இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது

இந்திய மகளிர் அணி 7ஆவது முறையாக ஆசிய கிரிக்கெட் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இந்திய மகளிர் அணி 7ஆவது முறையாக ஆசிய கிரிக்கெட் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்தில் 2022 ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில்  ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில் களம் இறங்கியது. நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரைஇறுதியில் தோற்றன. இந்நிலையில், … Read more

சீரற்ற காலநிலை: 55 ஆயிரத்து 435 பேர் பாதிப்பு – மூவர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையினால் 13 ஆயிரத்து 902 குடும்பங்களை சேர்ந்த 55 ஆயிரத்து 435 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை அறிவித்துள்ளது. மூவர் உயிரிழந்துள்ளனர். மேல் மாகாணத்திலேயெ அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரக்காப்பொல – தும்பலியத்த மாயின்நொலுவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது பிரேமசிறியும் அவரது மனைவியும் அவர்களது மூத்த மகனும் வீட்டிற்குள் இருந்துள்ளனர். 10 வயதான இளைய மகன் பகுதி நேர வகுப்பிற்காக வீட்டிலிருந்து சென்றிருந்தார். இதேவேளை … Read more

கட்சி அரசியலை புறந்தள்ளி, மக்களின் உணவுப் பிரச்சினைக்கு தீர்வு காண உறுதி கொள்வோம் – ஜனாதிபதி அம்பாறையில் தெரிவித்தார்.

சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார். கிராமிய பொருளாதார மையங்களை வலுவூட்டும் பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பில் அம்பாறை மாவட்டத்திற்கான அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (15) முற்பகல் அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதுவரை … Read more

இலங்கையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான இராஜதந்திர சம்பிரதாயங்கள் குறித்த அமர்வு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுப்பு

தமது உத்தியோகபூர்வக் கடமைகளை எளிதாக்குவதற்கான இராஜதந்திர சம்பிரதாயங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஒரு நாள் விளக்க அமர்வை இலங்கை பொலிஸின் 30 சிரேஷ்ட அதிகாரிகள் குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெற்றிகரமாக நடாத்தியது. இந்த அமர்வு 2022 அக்டோபர் 13ஆந் திகதி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. வியன்னா சாசனம் மற்றும் இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின்படி சர்வதேச நெறிமுறைகள், நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் உள்வரும் வெளிநாட்டுப் பிரமுகர்களின் விஜயங்களை ஒழுங்குபடுத்தும் முறைகள் உட்பட பல ஊடாடும் அமர்வுகளை இந்தத் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், இலங்கை வர்த்தக சபையுடன் துபாய் , வடக்கு எமிரேட்ஸில் கலந்துரையாடல்

இலங்கை வர்த்தக சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, தனது குறுகியதொரு விஜயத்தின் போது துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் வைத்து 2022 ஒக்டோபர் 11ஆந் திகதி சந்தித்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை மற்றும் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். இலக்காகக் கொள்ளப்படும் குழுக்களுக்கான சமூக ஊடக பிரச்சாரங்கள் உட்பட பல்வேறு வகையான பிரச்சாரங்கள் … Read more

தற்போதைய பலத்த மழையுடனான கால நிலை மேலும் தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.  2022 ஒக்டோபர்16ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022ஒக்டோபர்15ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. வெப்பவலயங்களுக்கு இடைப்பட்ட ஒடுங்கும் வலயத்தின் (ITCZ – வடஅரைக்கோளத்திலிருந்தும் தென்அரைக்கோளத்திலிருந்தும் வீசுகின்றகாற்று ஒன்றிணையும் பிரதேசம்)  தாக்கம்காரணமாக, தற்போதைய பலத்த மழைவீழ்ச்சி மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது … Read more