கொழும்பில் காணி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு

கொழும்பு மாவட்டத்தில் காணி விலைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளபடி, கொழும்பு மாவட்டத்தில் காணி மதிப்பீட்டுச் சுட்டெண்ணின் பெறுமதி 186.9 ஆக உயர்ந்துள்ளது, இது வருடாந்தம் 17 வீதம் அதிகரிப்பைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்துறை ஆகிய மூன்று குறியீடுகளின் உயர்வின் விளைவாக நில மதிப்பீட்டுக் குறியீட்டின் உயர்வு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இங்கு, தொழில்துறை நில விலைகள் 20.6 வீதம் ஆண்டு வளர்ச்சியுடன் … Read more

அரசு அதிகாரிகளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்புவதை துரிதப்படுத்த தீர்மானம்

அரச அதிகாரிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிப்பது, அரசு ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு திறம்பட அனுப்பும் செயல்முறையைத் துரிதப்படுத்துவது, இதனுடன் தொடர்புள்ள  நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் அண்மையில் நடந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் முறைமையை, இலகுபடுத்தும் வகையில்  14/2022 ஆம் இலக்க அரச நிர்வாக சுற்றறிக்கையை  திருத்துவது … Read more

மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்களுக்கு அரச, தனியார் பிரிவுகள் உள்ளடங்கலாக மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். எரிசக்தி துறையில் காணப்பட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கையினால், மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். மாகாண ஆளுநர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று (19)  நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயங்களை தெரிவித்தார்.

மக்கள் அச்சம் சந்தேகம் இன்றி வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

மக்கள் அச்சம் சந்தேகம் இன்றி வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ‘தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் ஊடக அறிக்கையிடல்’ என்ற தலைப்பில் இன்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன, இனம், சமயம், உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு எவருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது. நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்குமான உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். … Read more

பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் பதவியேற்றதன் பின்னர் மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றன. பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு பெற்ற), பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, வான்படைத் தளபதி எயார் … Read more

இலங்கையிலுள்ள 'சேவ் தி சைல்ட்' பிரதிநிதிகள் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவுடன் (NAHTTF) சந்திப்பு

ஆட்கடத்தளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக தாக்கத்தை உருவாக்குவதற்கும் நோக்கத்துடன் அரசு மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் திறனை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ‘சேவ் தி சைல்ட்’ அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவின் (Nயுர்வுவுகு) கூட்டம்  (ஆகஸ்ட் 17) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட புதிய கட்டிடம் திறப்பு

யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடம்நேற்றைய தினம் (18) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி – அறிவியல் நகரில் அமைந்துள்ள இந்த புதிய தொழில்நுட்ப பீடத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 525 … Read more