கதிர்காமம் எசல பெரஹெரவிற்கு வடகிழக்கில் இருந்து பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களுக்கு முதன்முறையாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் வசதிகள் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய, கதிர்காமம் எசல பெரஹெரவிற்கு வடகிழக்கில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, நீர் விநியோகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 2.04 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரையாக வரும் யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து மொனராகலை மாவட்டச் செயலாளர் திரு.குணதாச சமரசிங்க, ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்த பின்னர், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,  அதற்கான வசதிகள் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக வழங்கப்படுகின்றன. … Read more

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு நான்காம் கட்ட தடுப்பூசி

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பு நான்காம் கட்ட பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை, மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்களுக்கு, பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (05) திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் ஆரம்பித்துள்ள நிலையில் நான்காம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தலுக்கமைய முதற்கட்டமாக … Read more

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலைய கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மெளலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ், நகர சபை தவிசாளர் எஸ் எச்.எம். அஸ்பர், தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் யூ.எல். ஜாபிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களை … Read more

நாம் பழைய பொருளாதார மாதிரியை இனியும் பயன்படுத்த முடியாது, உலகளாவிய மாற்றங்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி  

நாம் பழைய பொருளாதார மாதிரியைப் இனியும் பயன்படுத்த முடியாது, புத்தாக்கமாகச் சிந்தித்து உலகளாவிய மாற்றங்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்ற இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கைகள் வெளியீட்டு விழா மற்றும்  புத்திஜீவிகள் ஒன்றுகூடல் சொற்பொழிவு நிகழ்வில் அதிதி உரை ஆற்றிய போதே ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். “ LET’S … Read more

மட்டக்களப்பில் பெண்களுக்கு தனியான ஒழுங்கமைப்பில் எரிபொருள் விநியோகம்

மட்டக்களப்பில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரத்தியோக வரிசைகள் ஒழுங்கு செய்யப்பட்டு (04) திகதி எரிபொருள் வழங்கப்பட்டது. எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக பெண்கள் இரவு பகலாக வரிசையில் காத்திருந்து சிரமத்தை எதிர்நோக்கி எரிபொருளை பெற்றுக்கொள்ள நேர்ந்தமையினால், பெண்களுக்கென தனியான வரிசையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.

இடைக்கால வரவு செலவுத் திட்டம்:முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஆராய்வு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சின் சார்பாக முன்னுரிமை அடிப்படையில் உள்ளடக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.    

சிறைச்சாலையில் கையடக்கதொலைபேசி: தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் கையடக்கதொலைபேசியை பயன்படுத்திய குற்றத்திற்காக இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதன்படி, அவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். 2022.07.27 கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த தானிஷ் அலி என்று குறிப்பிடப்படும் குறித்த சந்தேகநபர், … Read more

இரண்டு நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது! வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் இரு தினங்களுக்கான மின் விநியோக துண்டிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  இன்றைய தினத்திற்கான மின் துண்டிப்பு இதேவேளை இன்றைய தினம் ஒரு மணிநேரம் மட்டுமே மின் துண்டிப்பு செய்யப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நேற்றைய தினம் அறிவித்திருந்தது. நாட்டில் நிலவும் அசாதாரண நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியினால் மின்னுற்பத்திக்கான நீர்த்தேக்கங்கள் … Read more

வங்கிக் கடன்கள், வரிச்சலுகை உள்ளிட்ட பல நிவாரணங்கள்! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினருக்கு வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர் தமது உற்பத்திக்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலரைப் பெற்றுக் கொள்ளவும், உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யவும் மற்றும் வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் விடுத்துள்ள வேண்டுகோளைக் கவனத்தில் கொண்டு அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் அமைச்சரவைப் பத்திரிமொன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அனுமதி அமைச்சரவையினால் … Read more

மின் துண்டிப்பு இன்று ஒரு மணி நேரத்திற்கு வரையறை

மின்சார உற்பத்திக்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் சுமார் ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்ட 3 மணிநேர தொடர்ச்சியான மின் துண்டிப்பு இன்று (5) ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க நேற்று (4) தெரிவித்தார்.