மடு ஆவணி திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணி திருவிழாவை முன்னிட்டு விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும், அநுராதபுரத்தில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும் எதிர்வரும் 13ஆம், 14ஆம், மற்றும் 15 ஆம் திகதிகளில் மடு ஆவணி திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மடு ஆவணி திருவிழா தொடர்பான முன் ஆயத்த … Read more

அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் சாரதிகளுக்கு….

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் சாரதிகள், தமது வாகனத்திற்கு போதுமான அளவு எரிபொருள் இல்லையெனில், நெடுஞ்சாலையில் பயணிப்பதை தவிர்க்குமாறு அதிவேக நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பிரிவு கேட்டுக்கொள்கிறது. அதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்,போதிய அளவு எரிபொருள் இல்லாத பட்சத்தில் வாகனங்கள் நுழையக்கூடாது’ என்ற டிஜிட்டல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

துரித பொருளாதார வளர்ச்சியை ஸ்திரமான நிலைக்கு உயர்த்துதல் எமது முயற்சியாகும்

பொருளாதார வளர்ச்சி வீதத்தை ஸ்திரமான நிலைக்கு உயர்த்துதல் அரசாங்கத்தின் முயற்சியாக உள்ளதோடு, 2026 ஆம் ஆண்டளவில் நிலையான பொருளாதார அடித்தளத்தை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். 2025-க்குள் முதன்மை வரவுசெலவு திட்டத்தில் உபரியாக இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அரச கடன் மொத்த தேசிய உற்பத்தியில் 140 சதவீதமாக உள்ளது. 2032 ஆம் ஆண்டளவில் இதனை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நிலைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் … Read more

வருட இறுதி வரை நாட்டில் எரிவாயுக்கு தட்டுப்பாடு இருக்காது

இந்த வருட இறுதி வரை நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, அடுத்த வருடத்திற்கான புதிய வழங்குனர் ஒருவர்(supplier) தெரிவாகியுள்ளார்.எனவே அடுத்த 16 மாதங்களுக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்று அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும், நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கவனம் செலுத்தி, மக்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் சர்வ கட்சி பொது வேலைத்திட்டத்தில் தீர்வு வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றிற்கான பொது வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வகட்சி அரசொன்றை அமைப்பதற்கான பொது வேலைத்திட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பை கோரிக்கையாக விடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அனுப்பியுள்ள கடிதத்திற்கு பதிலளித்து தமிழ் மக்களின் சார்பில் பத்து அம்சக் … Read more

ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் கைது

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நன்றி (காணொளி – முகநூல்) Source link

தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியமை அத்தியாவசியமான விடயங்களில் ஒன்றாகும்

பல வருட காலமாக தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியமை அத்தியாவசியமான விடயங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ, யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை இன்று (03) ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிடடார்.. அம்மக்களின் தீர்க்க வேண்டிய காணிப் பிரச்சினைகள் பல உள்ளன. வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் … Read more

ஜனாதிபதி தலைமையில் ,ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் இன்று (03)  முற்பகல் 10.30ற்கு ஆரம்பமாகவுள்ளது. இதன் போது ,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இன்றைய தினம நிகழ்வில் வழமையாக மேற்கொள்ளப்படும் சிறப்பு மரியாதை பீரங்கி வேட்டுக்கள் இடம்பெற மாட்டாது. அத்துடன் ஜனாதிபதியின் கொடி ஏற்றப்பட மாட்டாது. தேசியக்கொடி மாத்திரமே பறக்க விடப்படவுள்ளது ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ … Read more

கம்போடியாவில் நடைபெறவுள்ள 29வது ஆசியான் பிராந்திய மாநாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்

2022 ஆகஸ்ட் 4 முதல் 5 வரை நடைபெறவுள்ள 29வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி கம்போடியாவின் புனோம் பென் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார். 27 உறுப்பினர்களைக் கொண்ட ஆசியான் பிராந்திய மன்றத்தில் 10 ஆசியான் உறுப்பு நாடுகள், உரையாடல் கூட்டாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் அவுஸ்திரேலியா, கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியக் குடியரசு, ரஷ்யா மற்றும் அமெரிக்கா, பங்களாதேஷ், கொரிய … Read more