பில்கிஸ் பானு வழக்கு: சிறப்பு பெஞ்ச் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: குஜராத் கலவரத்தின்போது தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க சிறப்பு அமர்வினை அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி. பத்ரிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் ஷோபா குப்தாவிடம் புதன்கிழமை தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த விசாரணையின்போது, “இது அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய … Read more

வழக்கறிஞர் ஜான் சத்தியனை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தல்

டெல்லி: வழக்கறிஞர் ஜான் சத்தியனை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐகோர்ட் நீதிபதியாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களை அரசு நிறுத்தி வைத்ததற்கு நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர். வழக்கறிஞர் ஜான் சத்தியனை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க 2022 பிப்ரவரி 16-ல் முதலில் கொலீஜியம் பரிந்துரைத்தது.  

“இந்திய டிஜிட்டல் தொழில்நுட்பம் எளிதானது, பாதுகாப்பானது, வெளிப்படையானது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: “இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பம் எளிதானது; பாதுகாப்பானது; வெளிப்படையானது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 6ஜி தகவல் தொழில்நுட்ப தொலைநோக்குத் திட்ட அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். டெல்லியில் நடைபெற்ற இதற்கான விழாவில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சர்வதேச தகவல் தொழில்நுட்ப பொதுச் செயலாளர் டொரீன் போக்தன் மார்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, … Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர். இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் விஷப் பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்கள். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார்.

லண்டனில் நடந்த சம்பவத்திற்கு இந்தியா கொடுத்த பதிலடி! பஞ்சாப்பில் நடப்பதுதான் என்ன?

டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு, இன்று பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டுள்ளன. காலிஸ்தான் ஆதரவு அமைப்பு ‘வாரிஸ் பஞ்சாப் தே’ பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். அவர்மீது 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், அவரை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். லண்டனில் இந்திய தேசியக்கொடியை அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் … Read more

சட்டப் பிரிவு 370 மீண்டும் அமலானால் மட்டுமே பேரவைத் தேர்தலில் போட்டி: மெகபூபா முஃப்தி உறுதி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 மீண்டும் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், ”ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 மீண்டும் அமல்படுத்தப்படும் வரை சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். எனது இந்த முடிவு முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால், எனக்கு இது உணர்வுபூர்வமானது. … Read more

டெல்லியில் மீண்டும் நில அதிர்வு: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

டெல்லி: டெல்லியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் 2.7 ரிக்டர் அளவில் மீண்டும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

7th Pay Commission ஜாக்பாட்: அகவிலைப்படி அதிகரிப்பால் உயரும் ஊதியம், முழு கணக்கீடு இதோ

7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: இந்த முறை மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான காத்திருப்பு நீடிக்கிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக இது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் அதற்கு இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளிய்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த முறை போன்று இம்முறையும் அகவிலைப்படி நான்கு சதவீதம் … Read more

“டிஜிட்டல் புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா வேகமாக நகர்கிறது” – பிரதமர் மோடி

டிஜிட்டல் புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா வேகமாக நகர்வதாகவும், நாட்டு மக்களை தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மேம்படுத்துவதுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை பிரதமர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்படும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்ப்பதாகவும், பயனாளர் என்ற நிலையில் இருந்து தொழில்நுட்ப ஏற்றுமதியாளராக இந்தியா மாறி வருவதாகவும் கூறினார். மேலும்,120 நாட்களில் 5ஜி தொழில்நுட்பம் நாட்டின் 125 நகரங்களில் … Read more

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை தொடங்கியது.! தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு நிலவரம், பொது சுகாதார முன்னேற்பாடுகள் குறித்தும், கொரோனா பரவல் 0.7%-லிருந்து 1.9% ஆக அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் … Read more