டிஎன்பிஎஸ்சி.யில் பதவி உயர்வு: தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு

புதுடெல்லி: டி.என்.பி.எஸ்.சியில் பதவி உயர்வு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் கால அவகாச கோரிக்கை ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி உட்பட அரசுப் பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘டி.என்.பி.எஸ்.சியில் மதிப்பெண், சீனியார்ட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் நிலை … Read more

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு; கர்நாடகாவில் பதுங்கிய 2 தீவிரவாதிகள் கைது: மற்றொருவர் தலைமறைவு

பெங்களூரு: கர்நாடகாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா மாநகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளவர்கள் தங்கி இருந்த பாழடைந்த கட்டிடத்தை போலீசார் நேற்று காலை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், எலெக்ட்ரானிக்  பொருட்கள், டைரி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதாவர்கள் ஷிவமொக்காவை சேர்ந்த இன்ஜினியர்  சையத் யாசின் (22), மங்களூரு மாவட்டத்தை சேர்ந்த மாஸ் முனீர் அகமது (22) … Read more

தனது அந்தரங்க வீடியோவை வெளியிட்ட சென்னை டாக்டரை கொன்ற காதலி

* அரை மணி நேரம் சரமாரி அடி * தப்பிய மேலும் ஒருவருக்கு வலை பெங்களூரு: பெங்களூருவில் அந்தரங்க வீடியோவை வெளியிட்டதாகக் கூறி, காதலனை  தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த டாக்டர் விகாஷ், உக்ரைனில் மருத்துவப் படிப்பை  முடித்துவிட்டு சென்னையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். மேலும், இவர்  தனது உயர் படிப்பிற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெங்களூரு வந்தார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு … Read more

காங். தலைவர் பதவிக்கு சசிதரூர், கெலாட் போட்டி; ராகுலுக்கு சோனியா திடீர் அழைப்பு: தேர்தலுக்கான அறிவிப்பு நாளை வெளியீடு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசிதரூர், அசோக் கெலாட் தயாராகி உள்ள நிலையில், ராகுல் காந்திக்கு சோனியா காந்தி அவசர அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிக்கிறார். இந்நிலையில், புதிய கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ … Read more

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளித்தது சமத்துவத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி: ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது சமத்துவ கொள்கைக்குள் வகைப்படுத்த முடியாது,’  என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய  அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, … Read more

நொய்டாவில் சுவர் இடிந்து 4 பேர் பரிதாப பலி

நொய்டா:  உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் எல்லை சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் அருகே கால்வாய் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். … Read more

காங்கிரஸ் கட்சித் தலைவராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்?

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட்டின் வழிகாட்டுதல்படி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி, ராகுல்காந்தியே தலைவராக வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில், அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவேண்டும் என்று சோனியாகாந்தி விரும்புவதால் அவர் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி தெலங்கானா, மற்றும் பீகார் மாநிலங்களின் … Read more

மீனவர்களின் நலன்களையும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசு பாதுகாக்க வேண்டும்: ராகுல் காந்தி பேச்சு

ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை பணயம் வைத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மீனவர்களின் நலன்களையும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசு பாதுகாக்க வேண்டும் என அவர் கூறினார்.

சாமி சிலையைத் தொட்ட பட்டியலினச் சிறுவன் குடும்பத்துக்கு ரூ.60,000 அபராதம்

கர்நாடகாவில் சாமி சிலையை தொட்ட சிறுவன் குடும்பத்திற்கு ரூ. 60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் சென்றதால் தண்டனை, அபராதம் போன்ற கொடுமைகள் பட்டியலினத்தவருக்கு எதிராக அவ்வப்போது தொடர்ந்து வருகிறது. அதுபோன்றதொரு சம்பவம் கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் நடந்துள்ளது. மாலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஹுல்லேரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினச் சிறுவன் ஒருவன் சாமி சிலையை தொட்டதற்காக அவனுடைய குடும்பத்துக்கு ரூ. 60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் புதிதாக கோயில் கட்டப்பட்டுள்ளது. அதற்காக அங்குள்ள மக்கள் விழா … Read more

வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால்: மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி தற்கொலை செய்து கொண்ட விவசாயி

புனே: மகாராஷ்டிராவில் வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால் மனமுடைந்த விவசாயி, பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் வட்கான் ஆனந்த் கிராமத்தை சேர்ந்த விவசாயி தஷ்ரத் கேதாரி (42), பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு, குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த அலே பாடா போலீசார் விவசாயின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரமோத் க்ஷிர்சாகர் … Read more