கடந்த 40 நாட்களாக 250 நெல் மூட்டைகளை தடுத்து வைத்துள்ள ரவுடிகள்… விவசாயி பரபரப்பு புகாரால் வாக்குவாதம்.!
செங்கல்பட்டு அடுத்த படாளம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் கேட்டு மிரட்டும் ரவுடிகள், தனக்கு சொந்தமான 250 மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய விடாமல் தடுத்து வைத்திருப்பதாக விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் புகார் தெரிவித்தார். எப்படி புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் முன்னிலையில் நெல் கொள்முதல் நிலைய புரோக்கர்கள் விவசாயிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. … Read more