நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மீண்டும் மத்திய அரசு கடிதம்: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து விரைவில் பதிலளிக்கப்படும்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்குப் பிறகு, குடியரசுத் … Read more

கல்வி அறிவில் தேசிய சராசரிக்கு கீழ் சென்ற தமிழ்நாடு: ஓபிஎஸ் வருத்தம்!

வாசிக்கும் திறன், கணிதத் திறன், புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை மாணவ மாணவியரிடையே அதிகரிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதனாகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும், கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரிது என்பதற்கேற்ப ஒவ்வொருவரும் தன் வாழ்வில் கல்வியறிவு பெற வேண்டும். மனித வாழ்க்கை வளம் பெறுவதற்கும், சமுதாய மேம்பாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குவது வற்றாத … Read more

ஒன்று கூடிய அரசியல் தலைவர்கள்: ஒரே பேனரில் அசத்திய திருமண வீட்டார், போட்டோ வைரல்

திருமண நிகழ்ச்சிக்கு அரசியல் தலைவர்களை வரவேற்று நெல்லையில் வைக்கப்பட்டுள்ள வினோத பேனரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றன. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களின் புகைப்படங்களையும் ஒரே பேனரில் வைத்து திருமண வீட்டார் அசத்தியுள்ளனர். இந்த அசத்தல் பேனர் பேசுப்பொருளாகியுள்ளது. விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் கோமான் இல்ல திருமண விழா நெல்லையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் அழைப்பு … Read more

விருதுநகர் அருகே கணிஞ்சம்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு: 5 பேர் படுகாயம்

விருதுநகர்: விருதுநகர் அருகே கணிஞ்சம்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

கிணற்றில் மிதந்த பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் – தாய் சொன்ன அதிர்ச்சி தகவல்

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே கட்டார்குளத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை கிணற்றில் வீசி படுகொலை செய்யப்பட்டது. குழந்தையை பெற்ற தாயே கொலை செய்தாரா என்ற சந்தேகத்தின் பேரில் களக்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கட்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். ஆட்டோ டிரைவரான இவரது மனைவியின் பெயர் இசக்கியம்மாள் (வயது 28). கொஞ்சம் மனநலம் சரியில்லாமல் இருந்து வந்த இசக்கியம்மாளுக்கு கடந்த 13ஆம் தேதி பெண் … Read more

இனி ஒவ்வொரு மாதமும் மின்கட்டண உயர்வு? மின்சார சட்டத் திருத்தத்திற்கு டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்!

மின்சாரக் கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்க வழிவகுப்பதா? மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ள மின்சார சட்டத் திருத்த விதிகள் 2022 நடைமுறைப்படுத்தப்பட்டால், மின்சாரக் கட்டணம் அதன் உற்பத்திச் செலவு மற்றும் கொள்முதல் விலைகளுக்கு ஏற்ற வகையில்  ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்! மின்சாரத்தை உற்பத்தி … Read more

குட் நியூஸ்.. தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்..!

பிப்ரவரி மாதத்தில் நடக்கும் வணிகவியல் தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி மாதம் 20-ம் தேதி கடைசி நாள் என முன்பு கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில், தனித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை வந்துள்ளது. அதன்படி, இணையத்தில் பதிவுசெய்த தனித் தேர்வர்கள் வருகிற 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்து தங்களுக்கான தேர்வு அணிகளை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களை https://dte.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என தமிழக … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக நிர்வாகக் குழுவை பாஜக அமைத்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திருநெல்வேலி: “ஈரோடு இடைத்தேர்தல் வேலைக்காகவே 14 நிர்வாகிகள் கொண்ட குழுவை பாஜக தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்” என்று அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருநெல்வேலியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தமட்டிலும், அது ஏற்கெனவே தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி. … Read more

உலகப் பொருளாதார மன்றம் 2023: கவனம் ஈர்த்த தமிழ்நாடு அரங்கு!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum – WEF) வருடாந்திரக் கூட்டம் 2022இல் தமிழ்நாடு முதன் முறையாக பங்கேற்று, உலகின் முன்னணி முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்திடுவது குறித்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அது போலவே, இந்த ஆண்டும், டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் 2023 ல் … Read more

தமிழகத்தில் மீண்டும் மழை: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 22, 23 தேதிகளில் … Read more