மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் இலவச மின்சாரம் ரத்தாகும் என்பது தவறான தகவல்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் என்பது தவறான தகவல் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின்பகிர்மான இயக்குநர் சிவலிங்கராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: வரும் நாட்களில் அதிகமழை பெய்தாலும்கூட எவ்வித பாதிப்பும்இன்றி சீரான … Read more

ராமஜெயம் கொலை வழக்கில் 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி அரசு மருத்துவமனையில் மீதமுள்ள 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. 12 பேயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பது விதிமுறை ஆகும். மீதமுள்ள மோகன்ராம், கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. நேற்று 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

ரூ.56 ஆயிரம் பணம் எடுத்ததாக வந்த குறுஞ்செய்தி: அதிர்ச்சியடைந்த பெண் – நடந்தது என்ன?

உளுந்தூர்பேட்டை ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் நூதன முறையில் கொள்ளையடித்த இளைஞர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, இவர் நேற்று உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்காகச் சென்றுள்ளார் அப்போது பணம் எடுக்கும் வழிமுறைகள் தெரியாததால் அங்கு வந்த இளைஞர் ஒருவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் ஏடிஎம் … Read more

குஜராத் தேர்தல் களம்: இன்னும் 11 நாட்கள்.. 40 இடங்களில் 29 பா.ஜ.க தலைவர்கள் பரப்புரை

குஜராத் தேர்தல் களம்: இன்னும் 11 நாட்கள்.. 40 இடங்களில் 29 பா.ஜ.க தலைவர்கள் பரப்புரை Source link

விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க இலக்கு!

கோவை மாவட்டதில் சிந்தாமணி ரேஷன் கடையில் இரண்டு மற்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விற்பனையை துவங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் “நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதுவரை நடப்பு நிதியாண்டில் 9.51 லட்சம் விவசாயிகளுக்கு 7,166 கோடி ரூபாய் விவசாய கடன் … Read more

அலுவலகங்கள் மூடல்.. ட்விட்டர் நிறுவனத்தில் நடப்பது என்ன?

ட்விட்டர் நிறுவனத்தை உலகத்தில் உள்ள பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். அதன் பின் ஊழியர்களுக்கு ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஊழியர்களுக்கு எலான் மஸ்க் மெயில் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் ஊழியர்கள் வேலை நேரம் போக கூடுதலாக அலுவலகத்தில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.  ஊழியர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் வெளியேறுங்கள் என்ற எலன் மஸ்க்கின் உத்தரவை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே … Read more

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: புறப்பட்ட 2.5 நிமிடத்தில் இலக்கை எட்டி சாதனை

சென்னை: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆய்வில்உலகளவில் முன்னணி அமைப்பாக திகழ்கிறது. உலகளாவிய விண்வெளிவர்த்தகப் போட்டியை சமாளிப்பதற்காக இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக, விண்வெளி ஆய்வில்தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இஸ்ரோ முடிவுசெய்தது. இதற்காக 2020-ம் ஆண்டு ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன்மூலம் ராக்கெட்,செயற்கைக் கோள் தயாரித்தல் ஆகியபணிகளில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன. … Read more

முத்துநகர் எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு மிரட்டல்: சோதனையில் இறங்கிய நிபுணர்கள்!

தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து தினமும் இரவு 8.20 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் ஒருநபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலை வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீசார் மற்றும் … Read more

Tamil News Live Update: திருமலை நாயக்கர் மஹாலை நவ.25ம் தேதி வரை கட்டணமின்றி பார்வையிடலாம் 

Tamil News Live Update: திருமலை நாயக்கர் மஹாலை நவ.25ம் தேதி வரை கட்டணமின்றி பார்வையிடலாம்  Source link

மீண்டும் விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்..!! மக்கள் அதிர்ச்சி

இந்தியாவின் அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட ரயிலாக வந்தே பாரத் ரயில் அறியப்படுகிறது. நாடு முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை – மைசூரு செல்லும் வந்தே பாரத் ரயில் போன வாரம் தான் திறப்பு விழா கண்டது. பிரதமர் மோடி கடந்த 12-ஆம் தேதி பெங்களூருவில் வைத்து இந்த வந்தே பாரத் ரயில் சேவையை … Read more