நெருங்கும் தீபாவளி: எரியக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டுசெல்லவேண்டாம் – ரயில்வே எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ரயில்களில் எரியக்கூடிய பொருட்களை பறிமுதல் செய்வதற்கான சோதனையை ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது. ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தென்னக ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர், பார்சல் மூலம் பட்டாசு போன்ற பொருட்களை ஏற்றிச் செல்வதை தவிர்க்குமாறு தென்னக ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து … Read more

குழந்தையின் கையில் பட்டா கத்தியை வழங்கி கேக் வெட்ட வைத்த நபர் கைது..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், குழந்தையின் கையில் பட்டா கத்தியை வழங்கி கேக் வெட்ட வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். சத்யா நகர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் மீது கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், தனது அண்ணன் மகன் பிறந்தநாள் விழாவின் போது, குழந்தையை மடியில் வைத்திருந்த அஜித்குமார், பட்டா கத்தியை குழந்தையின் கையில் வழங்கி கேக்கை வெட்டியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், … Read more

20000 காலியிடங்கள் | இந்தியில் கேள்வித் தாள்; தமிழில் கிடையாதா? – மத்திய அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்

சென்னை: தமிழில் எஸ்எஸ்சி தேர்வு வினாத்தாள் அமையை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஸ்டாஃப் செலக்சன் கமிசன் தேர்வுக்கான வினாத்தாள் இந்தியில் மட்டுமே இருக்கும் என்ற அறிவிப்பு தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ” மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன … Read more

புதூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மதுராந்தகம்: புதூர் ஊராட்சியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பூதூர், ஈசூர் ஆகிய 2 பெரிய கிராமங்கள் உள்ளன. இங்கு, சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், பசுமை புரட்சி ஏற்படுத்தும் விதமாக 2 கிராமங்களிலும் சுமார் 2000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சி.சுரேஷ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். முன்னதாக, ஊராட்சி செயலர் சத்யபிரியன் … Read more

தோஷம் கழிப்பதாக மூதாட்டியை ஏமாற்றி நகை பறித்த பெண்.! அதிரவைக்கும் கதை.! 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே முருகன் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், இவருக்கு 52 வயதில் தங்கம் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சமீபத்தில் பேருந்து பயணம் செய்த போது அவர் அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் தான் குறி சொல்பவர் என்று அறிமுகம் செய்து கொண்டு தங்கத்திடம் அவருடைய குடும்ப விபரங்கள் குறித்து கேட்டார்.  அவரும் அந்த குறி சொல்லும் பெண்ணிடம் தெரிவிக்க உடனே அந்த குறி சொல்லும் பெண் உங்கள் மகளுக்கு … Read more

திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்

சென்னை: திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை என்றும், அந்தப் புத்தகத்தை முழுமையாக மொழபெயர்க்க வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளின் முழுமையான அர்த்தத்தை புரிந்து வாசித்து வருகிறேன். திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூல்கள் 12-க்கும் மேற்பட்டவை என்னிடம் உள்ளன. அவற்றை … Read more

சூளைமேனி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையமாக மாறிய சமுதாய நலக்கூடம்

ஊத்துக்கோட்டை:  சூளைமேனி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையமாக சமுதாய கூடம் மாறியுள்ளது.  இதனால் இப்பகுதியில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம், நிச்சயதார்த்தம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற … Read more

காணாமல்போனதாகக் கூறப்பட்ட மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு: கொலையா தற்கொலையா?- போலீஸ் விசாரணை

காணாமல்போனதாக கூறப்பட்ட பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கொடுக்கன்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் கலைச்செல்வன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (15) மேல்மலையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், அவரை கடந்த ஐந்தாம் தேதி முதல் காணவில்லை எனவும் 6ஆம் தேதி செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில் காணமல் போன ராஜேஸ்வரி இன்று கொடுக்கன்குப்பம் கிராமத்தில் … Read more

சென்னையில் எங்கு தண்ணீர் தேங்கினாலும் அப்புறப்படுத்த மோட்டார் பம்புகள் தயார்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: “சென்னையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க 741 இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த இடத்தில் தண்ணீர் தேங்கினாலும் அதனை அப்புறப்படுத்த பம்புகள் தயாராக இருக்கிறது” என்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னை ராயபுரம் மண்டலம், வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரூ13.40 கோடி மதிப்பில் ரயில்வே வாகன சுரங்கப் பாதை அமைக்கும் திட்டப் பணியினை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு … Read more

உணவு மற்றும் குடிநீரின்றி தனுஷ்கோடி மணல் திட்டில் 2 நாளாக தவித்த குடும்பம் மீட்பு

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் இறக்கி விடப்பட்டு 2 நாட்களாக தவித்த குடும்பத்தினர் 5 பேரை மரைன் போலீசார் மீட்டனர். இலங்கை, தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகில் வந்த ஐந்து இலங்கை தமிழர்கள், தனுஷ்கோடி கடலில் உள்ள நான்காம் மணல் திட்டில் தவித்துள்ளனர். தகவலறிந்து மரைன் போலீசார் நாட்டுப்படகில் சென்று அவர்களை மீட்டு வந்தனர்.  விசாரணையில் இலங்கை மன்னார் தாழ்வுகாடு பகுதியை சேர்ந்த சபரி கூறுகையில், நான் எனது மனைவி ராதிகா, 7 … Read more