பாக்., சிறுமி கர்ப்பம்: சீன நாட்டவர் கைது| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சீன நாட்டவர் மீது அந்நாட்டு போலீசார் வழக்குப் பதிந்து, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி:பாகிஸ்தானைச் சேர்ந்த ௧௬ வயது சிறுமி சீனரிடம் மொழி பெயர்ப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். அப்போது முதல் அவர் அச்சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டி வந்துள்ளார். கடந்த ஜனவரியில் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சீனர் அதன்பின் தொடர்ந்து பாலியல் உறவு கொண்டுள்ளார். இதை வெளியே … Read more

வருது பறக்கும் பைக்: விலை ரூ. 6.20 கோடி

டெட்ராய்ட் : உலகின் முதல் பறக்கும் பைக்கை அமெரிக்க வாகன கண்காட்சியில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் உருவாக்கியுள்ள இந்த பறக்கும் பைக் டெட்ராய்ட் பகுதியில் நடக்கும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ட்ரோன் போன்ற வடிவமைப்பிலான பறக்கும் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது. மணிக்கு 99 கி.மீ., வேகத்தில் பறக்கும்.ஜப்பானில் இந்த பைக் விற்பனை துவங்கி விட்டதாகவும், இப்பைக்கின் … Read more

மோடிக்கு முன்கூட்டியே பிறந்த நாள் வாழ்த்து சொன்ன புடின்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சமர்காண்ட்: உஸ்பெஸ்கிஸ்தானில் பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்து கூறினார். ரஷ்ய அதிபர் புடின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க உஸ்பெஸ்கிஸ்தான் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேற்று (செப்.16) சந்தித்து பேச்சு நடத்தினார். இரு தரப்பு உறவு, பிராந்திய பாதுகாப்பு, சர்வதேச விவகாரம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் பேசினர். அப்போது விளாடிமிர்புடின் , பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே பிறந்த நாள் … Read more

பாதுகாப்பான மருத்துவம் – இன்று உலக நோயாளி பாதுகாப்பு தினம்

உலகளாவிய ரீதியில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தனிநபர்கள் சுகாதாரப் பாதுகாப்பை பராமரிப்பதில் ஊக்குவிப்பதற்காகவும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் உடல்நல குறைபாட்டுக்காக மருத்துவ உதவியை நாடியிருப்போம். நோயாளி பாதுகாப்பு பற்றி உலகளாவிய புரிதலை மேம்படுத்த, சுகாதார பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பை அதிகரிக்க வலியுறுத்தியும் உலக சுகாதார நிறுவனம் சார்பில் செப். 17ல் உலக நோயாளி பாதுகாப்பு தினம் கடைபிடிக்க படுகிறது. பாதுகாப்பற்ற மருத்துவம், மருந்துகளில் தவறு போன்றவை உலகளவில் சுகாதாரத்தில் … Read more

ரஷ்யாவின் கோர தாண்டவம்உக்ரைன் அதிபர் வேதனை| Dinamalar

கிவ்:”ரஷ்யாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடக்கிறது. ரஷ்யா நடத்திய இந்தப் படுகொலைகளை விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்,” என, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா தாக்குதலை துவக்கியது. இன்று வரை நீடிக்கும் இந்தப் போரில் ஏராளமான உக்ரைன் வீரர்கள் பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. … Read more

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு..!- அரச குடும்பத்தில் நிறவெறி சர்ச்சை..!

வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச் சடங்குக்குப் பிறகு இங்கிலாந்தில் நடக்கும் அரசின் முதல் இறுதி சடங்கு ராணி எலிசபெத்தின் இறுதி சடங்காகும். இதற்கு பல்வேறு உலக நாடுகளை சார்ந்த தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் . இங்கிலாந்து நாடு முழவதுமே ராணி மறைவையொட்டி சோகத்தில் மூழ்கி உள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. 21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள … Read more

இந்திய பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும்எஸ்.சி.ஓ., மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை| Dinamalar

சமர்கண்ட்:”இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டில் 7.5 சதவீதமாக உயரும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையும் ஒத்துழைப்பும் ஏற்படுவதை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்” என பிரதமர் மோடி பேசினார். நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாக வைத்து செயல்படும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா ரஷ்யா இந்தியா பாகிஸ்தான் கஜகஸ்தான் கிர்கிஸ்தான் தஜிகிஸ்தான் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.அரசியல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக … Read more

ராணி எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த சீன பிரதிநிதிகளுக்கு தடை! பின்னணி இதுதான்

லண்டன்: இங்கிலாந்து மகாராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு சீன பிரதிநிதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன தூதரகம் இந்த நடவடிக்கையை விமர்சித்தது. மேலும், சீன பிரதிநிதிகள் பிரிட்டன் மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த விதிக்கப்பட்ட தடை “தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக சீனாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பைத் தடுக்க இங்கிலாந்து பாராளுமன்றத்தின் சில தனிநபர்களின் வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான நடவடிக்கை” என்று சீனா கூறியது. தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மரியாதை செலுத்துவதற்காக சீன … Read more

நட்பு நாடுகள் கூட பாகிஸ்தானை பிச்சை கேட்கும் நாடாக பார்க்கின்றன: பாகிஸ்தான் பிரதமர் வேதனை

இஸ்லமாபாத்: நட்பு நாடுகள் கூட பாகிஸ்தானை பிச்சை கேட்கும் நாடாகப் பார்ப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனை தெரிவித்துள்ளார். கனமழை – வெள்ளப் பெருக்கு காரணமாக வரலாறு காணாத இயற்கைப் பேரிடரை பாகிஸ்தான் எதிர்க் கொண்டது. வெள்ளப் பெருக்கில் இதுவரை 1,200 பேர் பலியாகியுள்ளனர். 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 3 கோடிக்கும் அதிகமான மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் சுமார் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. … Read more

இது போருக்கான காலம் அல்ல – ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் இடையே, ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, இது போருக்கான காலம் அல்ல என தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக்காட்டி, இது போருக்கான காலம் அல்ல என குறிப்பிட்டார். … Read more