சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிதாக வரி விதிக்க பாகிஸ்தான் முடிவு..!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிதாக வரி விதிக்க உள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் அறிவித்துள்ளார். கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி, திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ள பாகிஸ்தானிடம் தற்போது 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே அந்நிய செலவானி உள்ளதாகவும், இத்தொகை அவர்களின் 16 நாள் இறக்குமதிக்கே செலவாகி விடும் என்றும் கூறப்படுகிறது. கடனுக்கான நிபந்தனையை ஏற்றதால், பாகிஸ்தானுக்கு முதற்கட்டமாக சுமார் 120 கோடி அமெரிக்க … Read more

சிரியாவில் பூகம்பத்தால் வீடிழந்த 50 லட்சம் மக்கள் பரிதவிப்பு

டமஸ்கஸ்: பூகம்பத்தினால் சிரியாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி – சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டரில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. பூகம்பத்துக்கு இதுவரை 24,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதில், போரினால் பாதிக்கப்பட்டு மெல்ல மீண்டு வந்திருந்த சிரிய மக்கள் பலரும் மீண்டும் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். இதுகுறித்து … Read more

இந்தியா நினைத்தால் உக்ரைன் போரை நிறுத்தலாமா.? – அமெரிக்கா பதில்.!

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் நேட்டோவில் இணைய உக்ரைன் சம்மதம் தெரிவித்ததால், அதை எதிர்த்து ரஷ்யா போரை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகிறது. … Read more

‘பல உயிர்களைக் காப்பாற்றிய ஜூலி’ – துருக்கி மீட்புப் பணியில் இந்திய மோப்ப நாய்கள் தீவிரம் 

அங்காரா: துருக்கி – சிரியா பூகம்பத்தில் மீட்புப் பணிகளில் உதவிட இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மீட்புக் குழு சிறப்பாக செயல்பட்டு வரும் அதேவேளையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டறிய மோப்ப நாய்கள் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றன. பூகம்பத்தால் பாதித்த துருக்கியில் இந்திய மீட்புக் குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக இந்தப் பணி தொடர்கிறது. இந்திய மீட்புக் குழுவுடன் ஜூலி, ரோமியோ, ஹனி, ராப்போ என்ற நான்கு மோப்ப … Read more

“டிக்‌ஷனரியில் கிட்டாத அர்த்தம் மிக்க சொற்கள்…” – இந்தியர்களின் உதவியால் துருக்கி தூதர் நெகிழ்ச்சி

அங்காரா: துருக்கியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருளாக 100 போர்வைகளை அனுப்பிவைத்த இந்தியர்கள் சிலருக்கு இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராத் சுனெல் நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார். துருக்கியின் காஜியன்டப் நகரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு இதுவரை துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி துருக்கியை அடுத்தடுத்து மூன்று பூகம்பங்கள் உலுக்கின. அதிகாலை 4.30 மணியளவில் 7.8 ரிக்டர் அளவிலும் மாலையில் 7.6 … Read more

மோடி நினைத்தால் உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியும்: அமெரிக்கா நம்பிக்கை| Modi can stop war on Ukraine if he wants: US desire

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியும் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இது ஓராண்டை கடந்துள்ள நிலையில், தற்போது இரு தரப்பும் தீவிரமாக போரிட்டு வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி … Read more

“இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியமான நாடு” – ஈரான் தூதர்

புதுடெல்லி: இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியமான நாடு என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி தெரிவித்துள்ளார். ஈரானில் ஷா ராஜ்ஜியத்தை இஸ்லாமிய புரட்சி மூலம் வீழ்த்தியதன் 44-வது ஆண்டு விழா புதுடெல்லியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதையடுத்துப் பேசிய இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி, ஈரானின் வளர்ச்சி குறித்தும், இந்திய – ஈரான் உறவு குறித்தும் எடுத்துரைத்தார். அவர் பேசியதாவது: ”சந்தேகமே இல்லாமல், ஈரானுக்கு மிகவும் முக்கியமான நாடு இந்தியா. ஈரான் அதிபர் ரைசி … Read more

ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய தடை – நேபாள அரசு அதிரடி!

காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரோஜாக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது. நேபாள தாவர தனிமைப்படுத்தல் மையம் மற்றும் பூச்சிக்கொல்லி மேலாண்மை மையம், தாவர நோய் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனக் கூறி இந்தியா மற்றும் சீனா … Read more

சீனாவை சேர்ந்த 6 நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா

சீன உளவு பலூன் அமெரிக்காவில் பறந்தது தொடர்பாக, சீனாவை சேர்ந்த 6 நிறுவனங்களை அமெரிக்கா பிளாக் லிஸ்ட்டில் சேர்த்துள்ளது. தங்கள் வான்வெளியில் பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியநிலையில், தற்போது சீனாவை சேர்ந்த 5 நிறுவனங்கள் மற்றும் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை அமெரிக்கா பிளாக் லிஸ்ட்டில் சேர்த்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் நிறுவனங்கள், அமெரிக்க தொழில்நுட்பங்களை பெறுவதில் இருந்து துண்டிக்கப்படும் என்பதை இந்த நடவடிக்கை காட்டுவதாக தொழில்துறை … Read more

ஹெச்1பி விசாவில் புதிய நடவடிக்கை: இந்திய ஐ.டி., ஊழியர்களுக்கு பயன் | New Action on H1B Visa: Benefit for Indian IT Workers

வாஷிங்டன்- அமெரிக்கா, ‘ஹெச்1பி விசா’ நடைமுறையில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரியளவில் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கணினி மென்பொருள், தொழில்நுட்பம் உட்பட குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அமெரிக்கா சென்று பணியாற்ற, ஹெச்1பி விசாவை அந்நாட்டு குடியேற்றத் துறை வழங்குகிறது. சிக்கல்கள் இந்த விசாவை, நம் நாட்டினரும், சீனர்களும் தான் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலத்தில், ஹெச்1பி விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் … Read more