தமிழகத்தில் சூரிய காந்தப் புயலால் செயற்கைக்கோள், விண்கலங்களில் பாதிப்பு ஏற்படலாம்- விஞ்ஞானிகள் தகவல்

கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வானியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு தொடர்ந்து சூரியனின் நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சூரியனில் தோன்றிவரும் கரும்புள்ளிகள் குறித்து வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், ‘தமிழகத்தில் சூரிய காந்தப் புயல் கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 8 முறை சூரிய காந்தப்புயல் ஏற்பட்டுள்ளது. இது மிதமான முறையில் இருந்தது. இனிவரும் நாட்களில் சூரிய காந்தப் புயல் தன்மை வலுவடைய கூடும். இதனால் செயற்கைக்கோள், ஜி.பி.எஸ். விண்கலம் போன்றவை பாதிக்கப்படலாம்’ என்றனர்.
சூரிய காந்தப் புயல் பூமியை 8 முறை தாக்கியதை கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளியாகும் சக்தி வாய்ந்த காந்தப்புயல் பூமியின் வளிமண்டலத்தை தாக்கக்கூடும் என்று ஏற்கனவே நாசா விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதன் தாக்கம் குறித்து கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் 5 தொலைநோக்கிகள் மூலம் கண்காணித்து வந்தது. அப்போது, இந்த காந்தப் புயல் நேற்று மட்டும் பூமியைத் தாக்கியது தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலால் செல்போன் செயற்கைக்கோள், ஜி.பி.எஸ். என தொடர்பு சேவைகள் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கின்றனர். கூடுதலாக 4 தொலைநோக்கிகளை கொண்டு தொடர்ந்து வானியல் மாற்றங்களை கண்காணித்து வருகின்றனர். 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய காந்தப் புயல் பூமியை தாக்கும் என கூறும் விஞ்ஞானிகள் கடந்த 2003ஆம் ஆண்டு இதே போன்ற பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.