“திருப்பரங்குன்றம் மலைக்கு வந்த நவாஸ்கனி எம்.பி.யை கைது செய்க” – ஹெச்.ராஜா

மதுரை: “திருப்பரங்குன்றம் மலைக்கு வந்த நவாஸ்கனி எம்.பி-யை கைது செய்ய வேண்டும்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தினார். மதுரை திருப்பரங்குன்றத்தில் மலைமேலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதித்த நிலையில், எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்து முன்னணியினரும் பேரணி நடத்தினர். இது தொடர்பாக இரு தரப்பிலும், 400 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமீது, … Read more

2015 கனமழையில் உடைந்த ஏரி – சீரமைக்க கோரி 7 ஆண்டாக போராடும் விவசாயி!

கடந்த 2015-ம் ஆண்டு உடைந்த கவுரிவாக்கம் தாங்கல் ஏரியை சீரமைக்க வலியுறுத்தி, அதிகாரிகள் முதல் தமிழக முதல்வர்கள் வரை தொடர்ந்து 7 ஆண்டுகளாக முறையிட்டு வருகிறார் அப்பகுதி விவசாயி. தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் கவுரிவாக்கம் தாங்கல் ஏரி உள்ளது. மொத்தம், 48 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ஏரியின் நான்கு திசைகளிலும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. இதனால், 10 ஏக்கருக்கும் குறைவான பரப்புக்கு இந்த ஏரி சுருங்கிவிட்டது. மழைக்காலங்களில் ஏரியில்தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, கழிவுநீர் … Read more

நீங்களும் பேக்கரி ஓனர் ஆகலாம்..! தமிழ்நாடு அரசு கொடுக்கும் சூப்பர் வாய்ப்பு

Tamil Nadu government | பேக்கரி தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்காக தமிழ்நாடு அரசு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. அது குறித்து கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

திருப்பரங்குன்றம் மலையில் அத்துமீறல்கள்: பிப்.4-ல் இந்து முன்னணி போராட்டம்

சென்னை: “திட்டமிட்டு திருப்பரங்குன்றம் முதல் படைவீட்டில் மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை கண்டித்தும், தமிழக அரசு இஸ்லாமிய அமைப்புகளின் சதியை முறியடிக்க வலியுறுத்தியும், இந்து முன்னணி மக்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை பிப்ரவரி 4-ம் தேதி நடத்தவுள்ளது,” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகும். … Read more

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

சென்னை: சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் செய்வோருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய … Read more

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சுரக்‌ஷா புரஸ்கார் வெண்கல விருது

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறும் கட்டுமான தளங்களில் சிறந்த பாதுகாப்பு செயல்திறனை நிரூபித்ததற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2024-ம் ஆண்டுக்கான சுரக்‌ஷா புரஸ்கார் வெண்கல விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின், தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தியா (NSCI) சார்பில், 2024-ம் ஆண்டுக்கான பாதுகாப்பு விருதுகளில் மதிப்புமிக்க சுரக்‌ஷா புரஸ்கார் வெண்கல விருது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பு மிக்க அங்கீகாரம், 2-வது கட்ட … Read more

மாதவரம் பகுதியில் கழிவுநீர் உந்துகுழாய் பதிக்கும் பணிகள்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: மாதவரம் ரவுண்டானா அருகிலும், மூலக்கடை சந்திப்பிலும் கழிவுநீர் உந்து குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால், மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் பகுதிகளில் கழிவுநீர் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் மக்கள் அதிகாரிகளை அணுகி தீர்வு காணலாம். இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மாதவரம் 200 அடி சாலையில் மாதவரம் ரவுண்டனா பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில் மற்றும் மூலக்கடை சந்திப்பில் கழிவுநீர் உந்து குழாய் இணைக்கும் … Read more

தொழிலாளி உயிரிழப்புக்கு காரணமான ஆர்.கே.நகர் போலீஸார் மீது நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: பட்டறை தொழிலாளி உயிரிழப்புக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக காவல்துறையின் அலட்சியப்போக்கு காரணமாக, சென்னை ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன்பு ராஜன் என்கிற பட்டறை தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ராஜன் உயிரிழப்பு குறித்து அவரது உறவினர்கள் கூறுவது வேறு விதமாக உள்ளது. அதாவது, கடந்த மாத இறுதியில், ராஜன் மது அருந்திவிட்டு … Read more

சீமான் கோமணம் இல்லாமல் போவார் ஜாக்கிரதை – ஆர் எஸ் பாரதி எச்சரிக்கை!

திமுக கட்சியினரை  தூண்டிவிட்டால் சீமான் சீமானாகப் போக முடியாது, கோமணம் இல்லாமல் போவார் ஜாக்கிரதை என்று சீமானுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எச்சரிக்கை.

கடல் ஆமை இறப்​புக்கான காரணம் உடற்​கூராய்​வுக்​கு பிறகே தெரியும்: பசுமை தீர்ப்​பா​யத்​தில் அரசு விளக்கம்

சென்னை: கடல் ஆமை இறப்புக்கான காரணம் உடற்கூராய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவொற்றியூர் முதல் கோவளம் வரை கடற்கரையோரங்களில் கடந்த வாரம் ஏராளமான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவற்றின் திடீர் இறப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆமைகள் இறப்பு தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக … Read more