தமிழகத்தின் மிக்ஜாம் புயல், கர்நாடகா வறட்சிக்கு நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு

புதுடெல்லி: தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது. அதேபோல் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு ரூ.3454 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது. புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல்: கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, … Read more

கோவை கார் குண்டு வெடிப்பு நடைபெற்றது ஏன்? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட என்ஐஏ!

Coimbatore car blast chargesheet filed NIA : கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 14வது நபர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கார் குண்டு வெடிப்புக்கான பின்னணியை வெளியிட்டுள்ளது.

முதல்வர் மாலத்தீவு செல்வதாக வெளியான தகவல் தவறு: திமுக

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு செல்வதாக வெளியான தகவல் தவறானது என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக கடந்த மார்ச் மாதம் இறுதி முதல், ஏப்.16-ம் தேதி வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்பின், கடந்த சில தினங்களாக திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, கள … Read more

உளுந்தூர் பேட்டையில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ காரணம்! பின்னணி இதுதான்

Ulundurpet Bus Accident, Omni Bus Accident : உளுந்தூர்பேட்டையில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலப்பு? – புதுக்கோட்டை சங்கம்விடுதியில் அதிகாரிகள் விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக எழுந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஊராட்சி செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுகள் கலந்த நிலையில் நேற்று முன்தினம் மாட்டு சாணம் கலந்த குடிநீர் வந்ததாக தகவல் பரவியது. தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெரியசாமி, பால்பிரான்சிஸ் … Read more

சுதந்திர தின அருங்காட்சியகத்துக்கு பழங்கால பொருட்களை பொதுமக்கள் வழங்கலாம்: அருங்காட்சியகங்கள் துறை

சென்னை: சென்னை ஹுமாயூன் மஹாலில் அமைய உள்ள சுதந்திர தின அருங்காட்சியகத்துக்கு, சுதந்திர போராட்டம் தொடர்பான பழங்கால பொருட்களை பொதுமக்கள் நன்கொடையாக வழங்குமாறு அருங்காட்சியகங்கள் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அருங்காட்சியகங்கள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. அதில், தமிழகத்தின் தியாகம், பங்களிப்பை போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று 75-வது சுதந்திர தின விழா உரையில் முதல்வர் அறிவித்தார். அதன்படி, சென்னை மெரினா கடற்கரை எதிரே … Read more

தமிழ்நாட்டில் இன்றும் கொளுத்தபோகும் வெயில்! மக்களே உஷாராக இருங்கள்

today’s temperature Tamilnadu : தமிழ்நாட்டில் இயல்பை விட இன்று 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.30 முதல் மழை வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் ஏப்.30, மே 1 ஆகியதேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானமழை பெய்யக்கூடும். மே 2-ல்மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில்வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இத்தகவலை சென்னை வானிலை … Read more

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, காணொலியில் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து, அன்றைய தினமே 39 மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த … Read more

உள்நாட்டு விமானத்தில் தங்கக் கட்டிகள் கொண்டு வரலாமா? – சுங்கத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்நாட்டு விமானத்தில் தங்கல் கட்டிகள் கொண்டு வரலாமா என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து சுங்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மதுரையைச் சேர்ந்த சையத் இப்ராஹிம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் இருந்து விமானத்தில் 497 கிராம் தங்கத்தை எடுத்து வந்தேன். அப்போது சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் என்னை பிடித்தனர். பெங்களூருவில் நகைகள் செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாததால் … Read more