ஹெல்மெட் அணியாமல் சென்ற விளவங்கோடு எம்எல்ஏவுக்கு அபராதம்: போலீஸார் நடவடிக்கை

நாகர்கோவில்: தலைகவசம் அணியாமல் சென்ற விளவங்கோடு எம்எல்ஏதாரகை கத்பர்ட்டுக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர் கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் சந்திப்பில் இருந்து குழித்துறை சந்திப்பிற்கு கடந்த 20-ம் தேதி மாலை ராஜீவ்காந்தி நினைவு தின ஊர்வலம் காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது. இதில் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார், விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பர்ட் மற்றும் காங்கிஸார் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் மீது அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தாரகை கத்பர்ட் எம்எல்ஏ மற்றும் சிலர் … Read more

“தவெக இன்னொரு பாஜக” – திமுகவில் இணைந்த வைஷ்ணவி விமர்சனம்

இளைஞர்களுக்கான அரசியலை தவெக ஊக்குவிக்கவில்லை. இன்று நான் திமுகவில் இணைந்துள்ளேன். தவெக என்பது இன்னொரு பாஜக என்பதே உண்மை என்று திமுகவில் இணைந்த முன்னாள் தவெக நிர்வாகி வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவி கூறியதாவது: “தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த ஒரு வருடமாக இணைந்து பயணம் செய்தேன். தவெகவை பொறுத்தவரை இளைஞர்களுக்கான அரசியலை முன்னெடுப்பார்கள் என்றுதான் என்னைப் போன்ற பலரும் அக்கட்சியில் இணைந்தோம். ஆனால் எங்களுக்கு அதிருப்தியே மிச்சம். இளைஞர்களுக்கான அரசியலை அவர்கள் … Read more

அமைச்சர் சேகர்பாபுவின் கருத்துக்கு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கண்டனம்!

புதுச்சேரி: தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை போற்றும் வகையில் புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி சார்பில் தேசியக்கொடி பேரணி இன்று (மே 22) நடைபெற்றது. தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து நோணாங்குப்பம் படகு குழாம் எதிரே உள்ள திருவள்ளுவர் சிலை வரை நடைபெற்ற பேரணிக்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செல்வகணபதி எம்பி, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், அசோக் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேசியக்கொடி மற்றும் … Read more

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.   

துணைவேந்தர் நியமன திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை தீர்ப்புக்கு CPI எதிர்ப்பு

சென்னை: நீதி பரிபாலன வரலாற்றில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை தீரா களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என துணைவேந்தர் நியமன திருத்த சட்டத்துக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் நியமனம் பெற்ற ஆரம்ப நாளிலிருந்து ஆர்.என்.ரவி மலிவான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி, ஒப்புதலுக்கு அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் … Read more

“தமிழக உரிமையை முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்” – அமைச்சர் மனோ தங்கராஜ் 

கோவை: “தமிழக உரிமையை முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார். அதில் சமரசமும் செய்து கொள்ள மாட்டார். டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி தேவையான நிதியை பெற்றுத் தருவார்.” என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம் ஆவின் விற்பனை அலுவலகத்தில் பன்னீர் சார்ந்த உணவு பொருட்கள் விற்பனையை ‘பன்னீர் ஹட்’ என்ற பெயரில், அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (மே 22) … Read more

2026 தேர்தல்: மதுரையில் தவெக தலைவர் விஜய் போட்டியா? வெளியான சூசக தகவல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

“சார்கள், தம்பிகளுடன் திமுகவின் தொடர்பு என்ன?” – எல்.முருகன்

சென்னை: “சார்கள், தம்பிகள் உடன் திமுகவுக்கு உள்ள தொடர்பு என்ன என்பதை அரசு விளக்க வேண்டும். திமுக அரசு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. அரக்கோணம் பெண் பாலியல் கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்,” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். தெற்கு ரயில்வேயில் மேம்படுத்தப்பட்ட 13 ரயில் நிலையங்கள் திறப்புவிழா பரங்கிமலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குபிறகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் 13 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 9 … Read more

மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதா? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறிப்பதா? கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர் சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என பாமக தலைவர் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜுன் 12-ல் தண்ணீர் திறப்பு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜுன் 12-ம் தேதி முதல்வர் தண்ணீர் திறந்து வைக்கிறார். இதனையொட்டி, மேட்டூர் அணையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று (மே 22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டில் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு … Read more