சித்தா படத்தின் டிரைலரை வெளியிடும் சூர்யா!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் 'சித்தா'. நிமிஷா சஜயன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான பாடல்களை திபு நினன் தாமஸ், பின்னணி இசை விஷால் சந்திரசேகர் என இருவரும் இசையமைத்துள்ளனர். செப்டம்பர் 28ம் தேதி அன்று இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த டீசர், பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து, இந்த படத்தை பார்த்த … Read more

கோடிக்கணக்கில் கொடுத்தேன்.. என்னை ஏமாத்திட்டாங்க.. கொடைக்கானல் பங்களா சர்ச்சை.. பாபி சிம்ஹா பரபர!

சென்னை: ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய பாபி சிம்ஹா சிறந்த நடிகருக்கான தேசிய விருதையே தட்டிச் சென்றார். தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா சமீப காலமாக ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்து வரும் நிலையில், திடீரென கொடைக்கானலில் அவர் கட்டிய வீடு விதிகளை மீறி கட்டப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

நீலாம்பரியாக நடிக்க ஆசை: பிரான்ஸ் அழகியான நடிகை ஆண்ட்ரனே

துணை நடிகை, மாடலிங், டப்பிங் ஆர்டிஸ்ட், சமையல் வித்தகர், வனவிலங்கு, இயற்கை ஆர்வலர் என பன்முக தன்மை கொண்டவர் பிரான்ஸ் அழகியான நடிகை ஆண்ட்ரனே. கொஞ்சும் தமிழில் அவர் அளித்த பேட்டி: நான் பிறந்தது பிரான்ஸ். 6 வயதில் புதுச்சேரியில் குடியேறிவிட்டோம். வீட்டிற்கு ஒரே செல்ல பெண். பி.எஸ்சி., நர்சிங் (கால்நடை பராமரிப்பு) பிரான்சில் படித்தேன். பள்ளி பருவத்திலேயே காஸ்டியூம் போட்டு, விழாக்களில் நடித்துள்ளேன். இந்த பயிற்சியே நடிப்பிற்குள் என்னை இழுத்தது. திரைப்படங்கள் மீதான பற்றால் தமிழை … Read more

Ethirneechal – ஆதிகுணசேகரன் இல்லாத எதிர்நீச்சல்.. டிஆர்பி ரேட்டிங் என்ன தெரியுமா?.. மாஸ் காட்டும் சீரியல்

சென்னை: Ethirneechal (எதிர்நீச்சல்) எதிர்நீச்சல் சீரியலில் பிரபலமான ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் இல்லாத சூழலில் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. சன் டிவியி ஒளிபரப்பான கோலங்கள் நெடுந்தொடர் மூலம் இயக்குநராக பிரபலமானவர் திருச்செல்வன். அதனையடுத்து பிற நெடுந்தொடர்களையும் இயக்கி வந்த அவர் தற்போது சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கிவருகிறார். தமிழ்நாட்டின் தற்போதைய சென்சேஷன் சீரியல் என்றால்

56 வயதில் தண்ணீருக்குள் பிரபல நடிகர் செய்த காரியம்..! வைரலாகும் வீடியோ..!

Akshay Kumar Aqua Workouts: பாலிவுட்டின் பிரபல நடிகர்களுள் ஒருவரான அக்ஷய் குமார், தண்ணீருக்குள் இருந்தவாறு உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

சிரஞ்சீவி படத்தில் மூன்று கதாநாயகிகள்!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் 157வது படத்தை பீம்பிஷரா பட இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். இதன் முன் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற நவம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது என கூறப்படுகிறது. பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ஜஸ்வர்யா ராய், அனுஷ்கா ஷெட்டி, மிருணாள் தாகூர் என மூவரும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது … Read more

Anushka – ப்ளீஸ் திருப்பி அனுப்பிடுங்க.. அலெக்ஸ் பாண்டியன் படத்தில் அனுஷ்காவுக்கு வந்த சிக்கல்?

சென்னை: Anushka (அனுஷ்கா) அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்தபோது நடிகை அனுஷ்காவுக்கு ஒரு சிக்கல் எழுந்ததாக கூறப்படுகிறது. தெலுங்கில் 2005ஆம் ஆண்டு சூப்பர் படத்தில் அறிமுகமான அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு சமமான ரெஸ்பான்ஸும் கிடைத்தது. மேலும் அறிமுகமான சில வருடங்களிலேயே

மாரி செல்வராஜ் – துருவ் : கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை படமாகிறதா?

மண்ணையும் மக்களையும் வைத்து காட்சி வழியாக கதை சொல்வதில் கை தேர்ந்தவர், மாரி செல்வராஜ். ‘பரியேறும் பெருமாள், கர்ணன்’ ஆகிய இரு படங்களும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி வட்டாரத்தைச் சுற்றிப் படமாக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் சேலம் மாவட்டப் பகுதியை வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் தான் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியை நோக்கி நகர்ந்திருக்கிறது, மாரியின் கேமரா. இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் ப்ரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் … Read more

மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் விஜய் ஆண்டனி

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகுந்த மன உளைச்சல் காரணமாக மீரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜய் ஆண்டனி, ‛என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்' என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். திடீரென மகள் இறந்ததால் படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் இருந்து … Read more

ராஜ் கமல் பிலிம்ஸ் பெயரில் பல கோடி மோசடி..ஆண்டவருக்கே விபூதி அடித்த இளைஞர்கள்.. நடந்தது என்ன!

சென்னை: கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ள சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 12 வகுப்பு மட்டுமே படித்துள்ள கேரளாவைச் சேர்ந்த புகழேந்தி என்பவரும், தமிழகத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவரும் விருதாசலத்தில் அலுவலகம் ஒன்றை தொடங்கினர். அதில், ஸ்டாக் மார்கெட் ஆலோசகராகவும், வர்த்தகம் தொடர்பாக