`உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் தேர்தலை நடத்த வேண்டும், ஏனென்றால்..!' – டெரிக் ஓ பிரையன் சொல்வதென்ன?

அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதாகவும், ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், தேர்தல் தேதி பிரதமர் மோடிக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், முதற்கட்டத் தேர்தல் தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்டதால்தான் பிரதமர் மோடி அதற்கேற்றவாறு தமிழ்நாட்டு பிரசாரத்துக்கு முன்னுரிமை அளித்திருப்பதாகவும். எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜக – தேர்தல் ஆணையம் மேலும், பிரதமர் மோடி எல்லா மாநிலங்களுக்கும் பிரசாரத்துக்குச் செல்லும் வகையில் தேர்தலைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி … Read more

`ஆசானுக்கு பத்ம பூஷண் கிடைக்க வேண்டாமா?’- சுரேஷ் கோபியை ஆதரிக்க கதகளி ஆசானை நிர்பந்தித்தாரா டாக்டர்?

கேரள மாநிலத்தின் பாரம்பர்ய கதகளி கலைகளை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை ஆசான்கள் என அழைக்கின்றனர். கதகளியில் மிகவும் பிரசித்தி பெற்றவர் கலா மண்டலம் கோபி ஆசான். இந்த நிலையில், கலா மண்டலம் கோபி ஆசானுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபிக்கு ஆதரவாக செயல்பட அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கலாமண்டலம் கோபி ஆசானின் மகன் ரகுகுரு கிருபா ஃபேஸ்புக்கில் போட்ட பதிவு மூலம் தெரியவந்தது.  அந்த … Read more

லோக்சபா தேர்தல் 2024: திமுக வேட்பாளர் பட்டியல் – தேர்தல் அறிகையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையையும் திமுக தலைவரும்,  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 20) வெளியிடுகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்,  திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும்  திமுக தேர்தல் அறிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (மார்ச் 20ந்தேதி) வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. இதையொட்டி, வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் இறுதி செய்து … Read more

ராமதாஸ் மனைவி காலில் விழுந்த அண்ணாமலை.. மலைத்த அன்புமணி! தைலாபுரம் தோட்டத்தில் ஒரு நெகிழ்ச்சி

திண்டிவனம்: பாஜக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக தைலாபுரம் தோட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது மொத்த இந்தியா முழுவதும் Source Link

காங்கிரஸிடம் இருந்து திருச்சியை பெற்ற மதிமுக… வைகோ போடும் கணக்கு என்ன?!

தி.மு.க கூட்டணியில் திருச்சி தொகுதியை பெற்றிருக்கிறது ம.தி.மு.க. அக்கட்சியின் முதன்மை செயலாளார் துரை வைகோ போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. ம.தி.மு.க திருச்சி தொகுதியை பெற்றது ஏன்? ம.தி.மு.க-வுக்கான களம் திருச்சியில் எப்படி இருக்கிறது என விசாரித்தோம். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், வி.சி.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இரண்டு தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல் ஆகிய தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு … Read more

தீவிரவாத அமைப்பிற்கு ஆட்கள் சேர்ப்பு: கோவையில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல்

சென்னை: தீவிரவாத அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் கோவையில் கைது செய்யப்பட்ட  4 பேருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம்ஆண்டு கோவையில் நடைபெற்ற கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகளுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்த நிலையில், தமிழகம், கேரளா, கர்நாடக மற்றும் தெலங்கானா என பல  இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். கோவையில் நடைபெற்ற … Read more

High speed train derailment | அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

அஜ்மீர், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் அடுத்த சபர்மதி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து உத்தர பிரதேசத்தின் ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையம் நோக்கி, நேற்று முன்தினம் அதிவிரைவு ரயில் புறப்பட்டது. ஏறத்தாழ 1,000க்கும் மேற்பட்ட பயணியருடன் சென்ற இந்த ரயில், அதிகாலை 1:00 மணியளவில் அஜ்மீர் அடுத்த மதார் ரயில் நிலையம் அருகே சென்றபோது, தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர், தடம் புரண்ட நான்கு ரயில் பெட்டிகளில் சிக்கித் தவித்த பயணியரை மீட்கும் பணியில் … Read more

Electoral Bonds: சிக்கிய திமுக… டார்கெட் செய்யும் அதிமுக… தாக்கத்தை ஏற்படுத்துமா?

தேர்தல் பத்திரங்கள் விவகாரம் நாட்டையே உலுக்கிவருகிறது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலமாக, அதிகளவில் பயனடைந்த கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. மேலும், அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ போன்ற மத்திய அரசின் அமைப்புகளை வைத்து மிரட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க பணம் பெற்றது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற … Read more

அதிகார வரம்பை மீறும் ஆளுநர் : மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை தமிழக ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், ”திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரான க.பொன்முடி அவர்களை மாநில அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருக்கிறார். சட்ட ரீதியான தடைகள் ஏதும் இல்லாத போது மாநில அரசின் பரிந்துரையை நிறைவேற்றுவது தான் மாநில ஆளுநரின் கடமை ஆகும். ஆனால், … Read more