சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவில் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படுகிறது…

பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான கதைகளை பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பி வருகின்றன. இதில் ஏராளமானவை உண்மைக்குப் புறம்பாகவும் வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது. மத ரீதியிலான, ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளுக்கு எதிராக மற்ற நாடுகளில் நடவடிக்கை எடுக்கும் அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சமூக ஊடகங்கள் இந்தியாவில் மட்டும் அதனை கண்டும் காணாதது போல் விட்டுவிடுகின்றன. … Read more

வரலாற்று சாதனை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை வெளியிட்டடது பீகார் மாநில அரசு…

பாட்னா: நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு,  ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதன்படி,பீகாரில் உள்ள மொத்த மக்கள் தொகை 13 கோடி பேரில், பொதுப் பிரிவினர் 15.52% என தெரிவித்துள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்டோர் 27.13%; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%, எனபிற்படுத்தப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 63.14 சதவிகிதம்எ ன தெரிவித்து உள்ளது.  தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%; பழங்குடி இன மக்கள் 1.69% என்றும் குறிப்பிட்டுள்ளது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ஜாதிவாரி … Read more

இதுதான் பாஜக.. \"இந்தியா\" வந்தாலும் அசைக்க முடியாது.. உத்தர பிரதேசத்தில் கிளீன் ஸ்வீப்.. பரபர சர்வே!

கொல்கத்தா: நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவை விட இந்தியா கூட்டணிதான் அதிக இடங்களை வெல்லும் என்று டைம்ஸ் நவ் – இடிஜி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. ஆனால் உத்தர பிரதேசத்தில் பாஜகதான் மீண்டும் மெஜாரிட்டி இடங்களை வெல்லும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான கருத்து கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன. Source Link

Asian Games 2023: சிறிய மைதானம், பெரிய வாய்ப்பு – தங்கக் கனவோடு களமிறங்கும் ருத்துவின் இந்தியப் படை!

சீனாவின் ஹாங்ஸு நகரில் கோலாகலமாக நடந்துவருகிறது 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள். பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்துவருகிறது இந்தியா. பதக்கபட்டியலில் மேலும் ஒரு தங்கத்தைச் சேர்ப்பதற்கு ஏற்றவாறு ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. நாளை தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது இந்தியா கிரிக்கெட் அணி. 19th Asian Games 2010, 2014-ம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தாலும் பிசிசிஐ அதில் பங்கேற்க எந்த அணியையும் அனுப்பிவைக்கவில்லை. இம்முறைதான் முதல்முறையாக ஆண்கள், பெண்கள் என இரு … Read more

அமிர்தசரஸ் பொற்கோயிலில் உணவு பரிமாறி பாத்திரங்களை சுத்தம் செய்து சேவை செய்த ராகுல் காந்தி… வீடியோ

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள உணவுக்கூடத்தில் உணவு பரிமாறியதோடு பாத்திரங்களை சுத்தம் செய்து சேவை செய்தார். ராகுல் காந்தியின் தனிப்பட்ட வருகை குறித்து கட்சியினருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றபோதும் இன்று காலை அமிர்தசரஸ் சென்ற ராகுல் காந்தியை அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் பொற்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த ராகுல் காந்தி சீக்கிய மத வழக்கப்படி தலையில் தலைப்பாகை அணிந்து பாடல்களைப் பாடி அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். … Read more

மழை காலங்களில் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்த வேண்டாம்| Dont use Google Maps app during rainy season

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொச்சி :கேரளாவில், ‘கூகுள் மேப்ஸ்’ உதவியுடன் காரில் சென்ற இரு இளம் டாக்டர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, பருவமழைக் காலங்களில் அந்த செயலியை பயன்படுத்த வேண்டாம் என, அம்மாநில போலீசார் எச்சரித்துள்ளனர். கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், டாக்டராக பணிபுரிந்து வந்த அத்வைத், 29, அஜ்மல், … Read more

CPM நிர்வாகிகளான தம்பதி அக்கவுன்ட்டில் கோடிகளில் பரிவர்த்தனை; மோசடியை விசாரித்த போலீஸ் அதிர்ச்சி!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், தலையோலப்பறம்பு அருகே புத்தனுரைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து (27). இவர் சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ-யின் தலையோலப்பாறம்பு இணைச் செயலாளராக இருக்கிறார். இவரின் கணவர் அனந்து உண்ணி (29), சி.பி.எம் தலையோலப்பறம்பு லோக்கல் கமிட்டி உறுப்பினராக இருக்கிறார். கிருஷ்ணேந்து தலையோலப்பறம்பிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தில் தங்க நகைக்கடன் வழங்குவது போன்ற செயல்பாடுகளும் நடந்துவருகின்றன. அந்த நிதி நிறுவனத்தில் நகைகளைத் திருப்பிய 19 பேரிடம் பணம் … Read more

தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம்!

சென்னை: தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக  ஆனந்த் பாட்டீல்  இருந்து வந்தார். இவர் சமீபத்தில், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, ஆளுநரின் புதிய செயலாளராக கிர்லோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குனராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்து வந்த ஆனந்த்ராவ் … Read more

திருமண விழாவில் மொத்த குடும்பமும் தீயில் பலி.. அதிர்ச்சியில் பேச முடியாமல் தவிக்கும் மணப்பெண்! சோகம்

பாக்தாத்: திருமண விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தைப் பறிகொடுத்த மணப்பெண் அதிர்ச்சியில் நிற்கிறார். இந்த மோசமான விபத்தில் என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம். வடக்கு ஈராக் நகரமான ஹம்தானியாவில் கடந்த வாரம் திருமண விழா ஒன்று நடைபெற்றது. அதில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்து மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. சமீப Source Link