விவாகரத்து கிடைத்ததால் பாக். பெண் கொண்டாட்டம் – வீடியோ வைரல்

நியூயார்க்: விவாகரத்து கிடைத்ததால் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் பார்ட்டி வைத்து கொண்டாடினார். அவரது கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு அண்மையில் விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அவர் முடிவுசெய்தார். தனக்கு விவாகரத்துகிடைத்ததை தனது நண்பர்கள்,தோழிகளுடன் அவர் ஓட்டலில்மிகப்பெரிய அளவில் பார்ட்டி வைத்துக் கொண்டாடியுள்ளார். விவாகரத்து கிடைத்ததற்கு வாழ்த்துகள் என்ற பின்னணிப் பலகையுடன் அவர் கொண்டாட் டத்தில் ஈடுபட்டார். மேடையில் ஏறி நின்று … Read more

இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

கொழும்பு, இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அனைத்துக் கட்சி ஆதரவுடன் அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் … Read more

ஜெர்மனியில் விமான நிலையத்தை முற்றுகையிட்ட சூழலியல் ஆர்வலர்கள்: காரணம் என்ன?

ஃபிராங்க்ஃபர்ட்: ஜெர்மனி நாட்டின் மிக முக்கிய விமான நிலையமான ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவை ரத்தானது. வியாழக்கிழமை அன்று அங்குள்ள சூழலியல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டது இதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஐரோப்பாவில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அங்கு விமான போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. இது காலநிலை மாற்றத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சொல்லி அங்குள்ள சூழலியல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். அதிகப்படியான … Read more

எச்.ஐ.வி. தொற்றுக்கு புதிய மருந்து; தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

கேப் டவுன், உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. தொற்று பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எச்.ஐ.வி. தொற்று பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காணும் மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவ ஆய்வாளர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எச்.ஐ.வி. தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 100 சதவீத செயல்திறனைக் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு 2 முறை (6 … Read more

ஒபாமா கொடுத்த ஒற்றை குரல்… கமலா ஹாரிஸிற்கு பிரகாசமாகும் வெற்றி வாய்ப்பு!

US Presidential Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸிற்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் மிசெல் ஒபாமா ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து, அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. 

விண்வெளியில் 50 நாட்களை கடந்த சுனிதா வில்லியம்ஸ்: பூமிக்கு திரும்புவது எப்போது?

சென்னை: சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு எப்போது திரும்புவார்கள் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. அவர்களது ஒரு வார கால விண்வெளி பயணம் தற்போது சுமார் 50 நாட்களைக் கடந்துள்ளது. இந்தச் சூழலில் அவர்கள் விண்வெளிக்கு பயணித்த போயிங் நிறுவன ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள ஹீலியம் கசிவு, த்ரஸ்டர் செயலிழப்பு போன்றவற்றுக்கான காரணத்தை அறிவதற்கான முயற்சியில் நாசா இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக … Read more

பிலிப்பைன்சில் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து 16 பேர் மீட்பு

மணிலா, பிலிப்பைன்சின் படான் மாகாணத்தில் இருந்து இலோய்கா நகருக்கு டெர்ரா நோவா என்ற எண்ணெய் கப்பல் புறப்பட்டது. தலைநகர் மணிலா அருகே சென்றபோது எழும்பிய ராட்சத அலை அந்த கப்பலை தாக்கியது. இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் சேதமடைந்த அந்த கப்பலை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது அந்த கப்பலில் இருந்த 16 பணியாளர்களை அவர்கள் மீட்டனர். மாயமான ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அந்த கப்பலை மீட்டு கரைக்கு கொண்டு … Read more

“கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” – ஒபாமா ஆதரவு

நியூயார்க்: “கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” என்ற ஆதரவுக் குரல் மூலம் அமெரிக்க அரசியல் களத்தில் நிலவிவந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அமைதி காத்தது பேசுபொருளானது. அதேநேரம், பிரபல அமெரிக்க பத்திரிகை … Read more

கொலம்பியாவில் கால்பந்து மைதானம் மீது டிரோன் தாக்குதல் – சிறுவர்கள் உள்பட 10 பேர் பலி

பொகோடா, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. இந்த கிளர்ச்சியாளர்கள் அப்பாவி மக்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்கிறது. இந்தநிலையில் ஆர்ஜெலியா நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் சிறுவர்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த மைதானம் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து … Read more

இலங்கையில் செப்.21-ல் அதிபர் தேர்தல்: ஆக.15-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது

ராமேஸ்வரம்: இலங்கையில் அதிபராக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அந்நாட்டு தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. உலகில் பெரும்பான்மையான நாடுகள் பிரதமர் ஆட்சி முறையைக் கொண்டிருந்தாலும், இலங்கையில் அதிபர் ஆட்சி முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தல் வேண்டும். ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். மூன்றாவது முறையாக … Read more