’கனடாவை அபகரிக்கும் ட்ரம்ப்பின் நோக்கம் நிஜமானது’ – ட்ரூடோ எச்சரிக்கை!
ஒட்டாவா: “கனடாவை அபகரித்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்வதில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காட்டும் ஆர்வம் நிஜமானது.” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடா பிரதமர் பதவியில் இருந்து விரைவில் வெளியேற இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைப்பதற்கு ட்ரம்ப் காட்டும் ஆர்வத்தினை சுட்டிக்காட்டி தனது ஆதரவாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ட்ரம்ப் நிர்வாகம் நம்மிடம் எத்தனை முக்கியத்துவமான கனிம வளங்கள் உள்ளன என்பதை தெரிந்து … Read more