உ.பி.யில் ராகுல், பிரியங்கா போட்டியா, இல்லையா?

ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் உத்தரபிரதேசத்தில் நேரு-காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். கடைசியாக 2019 தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ரேபரேலியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் இந்தமுறை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். உ.பி.யில் சமாஜ்வாதியுடன் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் இறுதி செய்துள்ளது. இதில் காங்கிரஸுக்கு அமேதியுடன், ரேபரேலியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், ரேபரேலியில் சோனியாவுக்கு பதிலாக பிரியங்கா வதேரா போட்டியிடுவார் எனப் பேசப்பட்டது. ராகுல் மீண்டும் கேரளாவின் வயநாடு தொகுதியில் … Read more

டெல்லி திஹார் சிறையில் உள்ள ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் எம்.பி.யாக பதவியேற்க அனுமதி

புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது எம்.பி. பதவி கடந்த ஜனவரி மாதம் முடிவடைய இருந்த நிலையில், மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார். இதையடுத்து, எம்.பி.யாக பதவியேற்க அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.கே.நாக்பால் சஞ்சய் சிங் பதவியேற்றுக் கொள்ள … Read more

கூகுள் மேப்பை நம்பி வர வேண்டாம்: சாலையோரம் பேனர் வைத்த குடகு கிராம மக்கள்

பெங்களூரு: மேப் விவரம் தவறானது என்று கர்நாடகாவின் குடகு பகுதி மக்கள் சாலையோரம் பேனர் வைத்துள்ளனர். கர்நாடகாவின் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் குடகு மலைப் பகுதி அமைந்துள்ளது. இது, ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது. குடகு மலைப் பகுதியின் மடிகேரி, விராஜ்பேட்டையில் ‘கிளப் மஹிந்திரா ரிசார்ட்ஸ்’ ஓய்வு விடுதிகள் செயல்படுகின்றன. இயற்கை எழிலை ரசிக்க விரும்பும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடகு மலைப் பகுதியில் அமைந்துள்ள ‘கிளப் மஹிந்திரா ரிசார்ட்ஸ்களுக்கு’ வருகின்றனர். புதிதாக வரும் சுற்றுலாப் பயணிகள் … Read more

ராணுவப் படையில் 6ஜி, ஏஐ தொழில்நுட்ப பிரிவு தொடக்கம்

புதுடெல்லி: பிற துறைகளைப் போன்று போர்க்களத்திலும் தொழில்நுட்ப மாற்றம் பெரும் பங்காற்றி வருகிறது. குறிப்பாக தகவல் தொடர்புத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி யுத்த களத்தில் எதிரிகளிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும், எதிரிப்படையை துல்லியமாகத் தாக்கவும் பெரிதும் உதவுகிறது. இது குறித்து ராணுவப் தொழில்நுட்ப பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய ராணுவத்தில் கம்பி மற்றும்கம்பியில்லா தொழில்நுட்ப முறைகளை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்ல ‘ஸ்டீக்’ (STEAG) எனப்படும் சமிக்ஞை தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் தகவமைப்பு … Read more

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ராஜினாமா: தேர்தலில் போட்டியிடுகிறார்

ஹைதராபாத்: ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 செப்டம்பர் 8-ம் தேதி தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார். கடந்த 2021-ல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன், … Read more

பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் எப்போதும் இல்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தனியார் ஊடகத்துக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது, மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், பிற கட்சிகளுடனான கருத்தொற்றுமை அடிப்படையில் பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி முன்னிறுத்தப்படலாம் என கூறப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது. இதுகுறித்து நிதின் கட்கரி கூறியதாவது: பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் ஒருபோதும் இருந்ததில்லை. இப்போது உள்ள பதவியே எனக்கு … Read more

40 மணி நேர போாரட்டத்துக்குப்பின் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்டது இந்திய கடற்படை: 35 சோமாலிய கொள்ளையர்கள் சரண்

புதுடெல்லி: மால்டா குடியரசு நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் எம்.வி.ரூன். இந்த கப்பலில் 1 மில்லியன் டாலர் மதிப்பில் 37,800 டன் சரக்குகள் இருந்தன. இதை சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேர், கடந்த டிசம்பர் 14-ம் தேதி கடத்தினர். கடந்த 3 மாதங்களாக இந்த கப்பலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சோமாலிய கொள்ளையர்கள் இந்த கப்பலை பயன்படுத்தி, பிற சரக்கு கப்பல்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்திய கடல் பகுதியில் இருந்து 2,600 கி.மீ தொலைவில் … Read more

அமலாக்க துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளேன்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ உட்பட மத்திய விசாரணை அமைப்புகளை பிரதமர் மோடி ஏவி விடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய நிறுவனங்களை மிரட்டி பாஜக அதிக நிதி பெற்றதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது: கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்னர் அமலாக்கத் துறை உட்பட மத்திய விசாரணை அமைப்புகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன. அந்த அமைப்புகள் … Read more

ஜனநாயகம் காக்கும் முதல்முறை வாக்காளர்கள்

‘நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள்; தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். விடுதலை வேட்கையை கவிதைகளால் தூண்டிய பாரதியாரும் இந்த சக்தியை உணர்ந்தே, ’இளைய பாரதத்தினாய் வா வா வா, எதிரிலா வலத்தினாய் வா வா வா’ என்று அழைப்பு விடுத்தார். இதே போல் பிரதமர் நரேந்திர மோடியும், இளைஞர்கள், மகளிர், விவசாயிகள், ஏழைகள் ஆகியோரை 4 பெரிய சாதிகள் என வகைப்படுத்துகிறார். அரசியலமைப்பு சட்டப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது என்றாலும், … Read more

மெகா கூட்டணி பலத்தை காட்டிய இண்டியா கூட்டணி தலைவர்கள் @ ராகுல் யாத்திரை நிறைவு விழா

மும்பை சிவாஜி பூங்காவில் நேற்று நடைபெற்ற பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையில், இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது 2-ம் கட்ட பாரத் ஒற்றுமை யாத்திரையை மணிப்பூரில் தொடங்கி மும்பையில் நேற்று முன்தினம் நிறைவு செய்தார். இதன் நிறைவுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். மும்பை சிவாஜி பூங்காவில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, … Read more