கன்னடர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும்: பெங்களூரு மாநாட்டில் எடியூரப்பா வேண்டுகோள்

பெங்களூரு: கர்நாடகாவில் கன்னடர் – தமிழர் இடையே எந்த வேறுபாடும் இல்லாமல், ஒற்றுமையாக வாழ வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா கேட்டுக்கொண்டார். பெங்களூருவில் தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் தலைமையில் கன்னடர்- தமிழர் ஒற்றுமை மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் எடியூரப்பா பேசியதாவது: எனது ஆட்சிக் காலத்தில் கர்நாடகாவில் கன்னடர்- தமிழர் இடையே ஒற்றுமை … Read more

‘டானா’ புயலை எதிர்கொள்ள தயார்: ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி

புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வரும் வியாழக்கிழமை இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், புயலை எதிர்கொள்ள ஒடிசா தயார் நிலையில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். “புயலை எண்ணி அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அரசு முழுவீச்சில் தயாராக உள்ளது. வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புயல் … Read more

கனமழையால் கட்டடம் இடிந்து விபத்து – உள்ளே சிக்கிய 17 பேர்… ஒருவர் பலி? – பெங்களூருவில் பரபரப்பு

Bangalore Building Collapse: பெங்களூருவில் கனமழை காரணமாக கட்டுமான பணி நடந்துவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 15க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய மகளிர் ஆணைய தலைவராக விஜயா கிஷோர் ரஹாத்கர் பொறுப்பேற்பு

புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணைய தலைவராக விஜயா கிஷோர் ரஹாத்கர் இன்று (செவ்வாய்க் கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணைய அலுவலகத்துக்கு வருகை தந்த விஜயா கிஷோர் ரஹாத்கருக்கு, அலுவலர்கள், பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து முன்மாதிரியாகத் திகழ்ந்த மறைந்த பெண் தலைவர்களான ஜான்சி ராணி லட்சுமிபாய் உள்ளிட்ட புகைப்படங்களுக்கு அவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து … Read more

‘சீன எல்லையில் இந்தியப் படைகள் விலக்கிக் கொள்ளப்படுவது எப்போது?’ – ராணுவத் தளபதி விளக்கம்

புதுடெல்லி: 2020ல் இருந்த நிலைக்குத் திரும்பிய பிறகே சீன எல்லையை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ள நமது படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ராணுவத் தளபதி உபேந்திரா திவேதி, “ஏப்ரல் 2020-க்கு முன் இருந்த நிலைக்கு தற்போதைய நிலைமையை மாற்ற விரும்புகிறோம். அதன்பிறகே, படை விலக்கல் குறித்து நாங்கள் ஆராய்வோம். ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்ப்பதற்கான நம்பிக்கையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். … Read more

ஜபல்பூர் | நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய கொடியை வணங்கி ‘பாரத் மாதா கி ஜே’ கோஷமிட்ட நபர்

ஜபல்பூர் (மத்தியப் பிரதேசம்): ‘பாகிஸ்தான் வாழ்க’ என்றும் ‘இந்தியா ஒழிக’ என்றும் முழக்கமிட்ட நபர், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிட்டார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பைசல் நிசார் என்ற நபர், ஒரு வீடியோவில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்றும் ‘இந்தியா ஒழிக’ என்றும் முழக்கமிட்டுள்ளார். இது தொடர்பான புகாரில் பைசல் நிசார் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்தியப் … Read more

நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல்: வயநாட்டில் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல்

புதுடெல்லி: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி நடத்தப்படும் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரும் பங்கேற்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய … Read more

சாலை விபத்துகளில் தினமும் 474 பேர் உயிரிழப்பு: நாடு முழுவதும் 4.63 லட்சம் பேர் காயம்

புதுடெல்லி: நாடு முழுவதும் ஏற்படும் விபத்துகள் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அனுப்பி வைக்கின்றன. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு 1.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி பார்த்தால் 3 நிமிடங்களுக்கு ஒருவரும் அல்லது ஒரு நாளைக்கு சராசரியாக 474 பேரும் உயிரிழந்துள்ளனர். தேசிய அளவில் ஏற்படும் விபத்துகள், எதனால் ஏற்படுகின்றன, எந்தெந்த வகைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை அறிய மத்திய அரசு தகவல்கள் திரட்ட தொடங்கியது. அதன் அடிப்படையில் சாலை விபத்துகளை தடுக்க … Read more

BRICS Summit 2024: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜின்பிங்குடன் சந்திப்பு சாத்தியமா?

BRICS Summit 2024: கசானில் நடைபெறும் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டார். அங்கு அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிற உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்’ (BRICS) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது. ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில் வரும் … Read more