“ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்…“ – முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

போபால்: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அம்மாநிலம் மீண்டும் வளர்ச்சி குன்றிய மாநிலமாக பின்னுக்குத் தள்ளப்படும் என்று பிரதமர் மோடி பேசினார். மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் பாஜக தேர்தல் களப் பணியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று (செப்.25) உரையாற்றினார். அப்போது அவர், “மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால் மாநிலம் வளர்ச்சி குன்றிய பிமாரு மாநிலமாகும். {பிமாரு – BIMARU) என்பது பொருளாதார, சுகாதார, கல்வியில் பின்தங்கிய மாநிலங்களின் … Read more

புதிய உச்சம்: 3 மாதங்களில் 90,000 மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா

புதுடெல்லி: முன் எப்போதும் இல்லாத அளவாக கடந்த 3 மாதங்களில் 90 ஆயிரம் மாணவர்களுக்கு விசா அளித்துள்ளதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் இந்திய மாணவர்கள் 90 ஆயிரம் பேருக்கு நாங்கள் விசா அளித்துள்ளோம். இந்திய – அமெரிக்க கல்வி பரிமாற்றத்தில் இது முன் எப்போதும் இல்லாத ஓர் உயர்வு. அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு … Read more

தொடர்ந்து 13-வது முறையாக தள்ளிப்போன தென் மேற்கு பருவமழை விடைபெறும் நிகழ்வு: ஐஎம்டி தகவல்

புதுடெல்லி: வழக்கத்தைவிட 8 நாட்களுக்குப் பின்னர் தென் மேற்கு பருவமழை விடைபெறத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எப்போதும் செப்டம்பர் 17-ல் விடைபெறும் தென் மேற்கு பருவமழை தற்போது செப்.25-ல் விடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது ஐஎம்டி. இது தொடர்பாக ஐஎம்எடி வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென் மேற்கு பருவமழையானது தென் மேற்கு ராஜஸ்தானில் இருந்து இன்று விடைபெற்றுள்ளது. இது வழக்கமாக செப்.17-ல் நிகழ் வேண்டியது. ஆனால் ஐந்து நாட்கள் கழித்து இன்று (செப்.25) நிகழ்ந்துள்ளது. இருப்பினும் … Read more

மறைந்த பாஜக தலைவரின் சிலைக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மரியாதை செலுத்தியதால் பரபரப்பு

பாட்னா: பாஜகவின் மறைந்த தலைவர் தீன்தயாள் உபாத்யாயவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நிதிஷ் குமார் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துவந்த நிதிஷ் குமார், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுக்கு எதிரான அணியை தேசிய அளவில் கட்டமைக்க முயற்சிகளை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நிதிஷ் குமார் தலைமையில் பாட்னாவில் நடைபெற்றது. இந்நிலையில், பாஜகவின் … Read more

பட்டியலினப் பெண்ணின் ஆடைகளை அகற்றி, அடித்து, சிறுநீர் கழிக்கப்பட்ட வன்கொடுமை: பிஹாரில் அதிர்ச்சி

பாட்னா: பிஹாரில் ரூ.1,500 கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டவர் மீது போலீஸீல் புகார் கொடுத்ததற்காக பட்டியலினப் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தி, தாக்கப்பட்டு, வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு பிஹார் தலைநகர் பாட்னாவின் குஷ்ருபூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, “பிரமோத் சிங் என்பவரிடம் எனது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.1,500 கடன் வாங்கினார். … Read more

இந்தியாவை துல்லியமாகக் காட்டும் ‘எக்ஸ்-ரே’ தான் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி

பிலாஸ்பூர்(சத்தீஸ்கர்): இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்-ரே (X-ray) ஆக சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கும் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் நாட்டில் எஸ்.சி. மக்கள், எஸ்.டி. மக்கள், ஒபிசி மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை நம்மால் சரியாக தெரிந்து … Read more

காவிரி விவகாரம் | மத்திய அரசுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா வேண்டுகோள்

பெங்களூரு: கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை முன்னாள் பிரதமர் தேவகவுடா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவில் தற்போதுள்ள நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அனுப்ப வேண்டும். நான் தற்போது உயிரோடு இருப்பது, அரசியல் செய்வதற்காகவோ, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவோ அல்ல. மாநில மக்களை பாதுகாக்கவே நாங்கள் இங்கே இருக்கிறோம். அதற்காகவே எனது கட்சி … Read more

நிம்மதியாக தூங்க இரவு முழுவதும் ஏசியை ஓடவிட்ட மருத்துவர்..! பறிபோன பிஞ்சு உயிர்கள்!

இரவில் தூங்க வேண்டும் என்பதற்காக மருத்துவர் ஒருவர் இரவு முழுவதும் ஏசியை ஓடவிட்டதால் இரண்டு குழந்தைகளின் உயிர் பறிபோயுள்ளது. நடந்தது என்ன..?

சூரிய – சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் பவனி: திருமலையில் இன்று தேரோட்டம்

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவ விழா கடந்த 18-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைய உள்ளது. இதில், 7-ம் நாளான நேற்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில், உற்சவரான மலையப்பர், ராம, கிருஷ்ண, மலையப்பர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பிரம்மோற்சவத்தின் … Read more

அக்.1-ம் தேதி ஒரு மணி நேர தூய்மை இயக்கம்: மக்கள் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தூய்மையை வலியுறுத்தி காந்தியடிகளுக்கு நாம் தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும். இதன்படி அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கம் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார். … Read more