‘நோட்டா’வை விட குறைந்த வாக்கு பெறும் வேட்பாளருக்கு தடை விதிக்க கோரி வழக்கு

நாட்டில் நடைபெறும் தேர்தலில் பல கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை, அவர்கள் அனைவருக்கும் எதிராக வாக்களிக்க விரும்புபவர்களுக்காக ‘நோட்டா’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டது. வாக்காளர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் தேர்தல் சட்டத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கடந்த 2013-ம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ‘நோட்டா’வுக்கென தனிச் சின்னத்துடன் பொத்தான் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளரும் எழுத்தாளருமான ஷிவ் கெரா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் … Read more

மணிப்பூரில் மீண்டும் வன்முறை | குகி இனத்தவர் தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் பலி

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 210-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். மாநிலத்தில் அமைதி இன்னும் முழுமையாக திரும்பவில்லை. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் அங்கு 2 … Read more

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாராமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் உள்ள செக் மொஹல்லா நவ்போராவில் நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அன்றைய தின நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் மீண்டும் துப்பாக்கிச் சூடு தொடங்கியது. … Read more

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலியின் அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இத்தாலியின் புக்லியாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை, பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்றுக் கொண்டார். இதற்காக, அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். இத்தாலியின் விடுதலை தினத்தன்று வாழ்த்து தெரிவிக்க பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் ஜார்ஜியாவை தொடர்பு கொண்டபோது இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நடந்து வரும் சூழ்நிலையில் பிரதமர் … Read more

வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானது: தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை100 சதவீதம் எண்ணக் கோரி ஜனநாயகசீர்திருத்த சங்கம், அபய்பக்சந்த், அருண்குமார் அகர்வால் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, … Read more

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிலவரம்: திரிபுராவில் அதிகபட்சம்; உ.பி.யில் குறைவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று (ஏப்.26) நடைபெற்றது. இரவு 10 மணி நிலவரப்படி 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 78.53 சதவீதம், மணிப்பூரில் 77.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதை தவிர, கேரளாவில் 65.78 சதவீதம், கர்நாடகா 68.26 சதவீதம், அசாம் 71.11 சதவீதம், பிஹார் 55.08 சதவீதம் வாக்குகள் … Read more

“என்டிஏ கூட்டணிக்கான மக்கள் ஆதரவு எதிர்க்கட்சிகளை ஏமாற்றப் போகிறது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மிக நன்றாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மிக நன்றாக இருந்தது. இன்று வாக்களித்த இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்றி. என்.டி.ஏ.வுக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளை மேலும் ஏமாற்றப் போகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள். இளைஞர்கள் மற்றும் … Read more

மத அடிப்படையில் வாக்கு கேட்டதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப் பதிவு

பெங்களூரு: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரான தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத அடிப்படையில் வாக்கு கேட்டதாக வழக்குப் பதிவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், “மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்டதற்காக தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். பெங்களூரு ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு தெற்கு தொகுதியின் சிட்டிங் … Read more

'பதறுகிறார் மோடி… இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்' – ராகுல் காந்தி கணிப்பு

Rahul Gandhi Slams PM Modi: பிரதமர் மோடியின் பேச்சில் இப்போது பதற்றம் தெரிகிறது என்றும் கூடிய விரைவில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ஆதிக்கத்துடன் பாஜக, புது வியூகத்துடன் காங்கிரஸ் – குஜராத் களம் எப்படி? | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, கடந்த கால தேர்தல்களில் அக்கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் எவ்வளவு, அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் குஜராத்தின் … Read more