வைரஸ் காய்ச்சல் பரவல் | மார்ச் 10ல் தமிழகத்தில் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

சென்னை: வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 10ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக சிறுநீரக தினம் மார்ச் 9ம் தேதி அனுசரிக்கப்படவிருக்கும் நிலையில் இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தனியார் மருத்துவமனை சார்பாக சிறுநீரக உடல்நல விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் வரை நடைபெற்ற … Read more

'திராணியில் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்…' ஸ்டாலினை சீண்டும் அண்ணாமலை

Case Against BJP Annamalai: வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக பாஜக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தவறான தகவலை பரப்பும் வகையில், கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மிது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல், குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு … Read more

நாடு முழுவதும் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆய்வு மையம் அறிவுறுத்தல்!

புதுடெல்லி: நாடு முழுவதும் சமீப காலமாக பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு ‘A H3n2 ‘ என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் ‘A H3n2 ‘ வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் … Read more

ஹிண்டர்ன்பர்க் அறிக்கை எதிரொலி: மீண்டும் சரிவில் அதானி குழும நிறுவன பங்குகள்..!!

குஜராத்: அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் மீண்டும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமான அதானி குழுமம் சமீபத்தில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வந்த நிலையில், அதானி குழும பங்குகள் தரை தட்டின. எனினும் இந்த சரிவினை மீட்டு எடுக்க அதானி குழுமம் அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதனிடையே, அதானி குழும நிறுவன பங்குகள் மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. அதன்படி, … Read more

'பிரபாகரன் வருகிறார்' தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டும் – பழ. நெடுமாறன்

உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது . மேலும், பிரபாகரனின் குடும்பத்தாருடன் பழகி வருவதால் இந்த தகவலை அவர்களது அனுமதியுடன் சொல்வதாக பழ. நெடுமாறன் கூறினார். தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலை இப்போது தெரிவிக்க முடியாது என்றவர் அவரது குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர் உரிய … Read more

“தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது" அதானியின் 413 பக்க அறிக்கைக்கு ஹிண்டன்பர்க் பதில்!

“ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியா மற்றும் அதன் அமைப்புகள், வளர்ச்சி மீது நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட தாக்குதல்” என்று அதானி குழுமம் நேற்று 413 பக்க அறிக்கையை வெளியிட்டது. அதானியின் 413 பக்கங்கள் கொண்ட நீண்ட பதிலை மறுத்து “மோசடி என்பது மோசடிதான்” என்று குறிப்பிட்டுள்ளது ஹிண்டன்பர்க். ஹிண்டன்பர்க் “ஹிண்டன்பர்க் இந்தியாவை திட்டமிட்டு தாக்கியுள்ளது” -அதானி குழுமம் 413 பக்க அறிக்கையில் சொல்வதென்ன? இதுகுறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது, அதானி குழுமத்தால் … Read more

தமிழகத்தைச் சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..!!

குடியரசு தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாணி ஜெயராம், கடந்த ஐந்து தசாப்தங்களாக கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களுக்கு அதிகமாக பாடியுள்ளார். அதேபோல் பரதநாட்டியக் … Read more

சென்னையில் நடந்த குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறை ஊர்திக்கு முதல் பரிசு

சென்னை: சென்னையில் நடந்த குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறை ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. தீயணைப்பு துறை ஊர்திக்கு 2-ம் பரிசு, செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊர்திக்கு 3-ம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஊர்தி குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்பு

டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது. இந்தியாவின் பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் அணி வகுப்பு நடைபெற்றது. அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு இருந்தது. ஆந்திரா, அசாம், உத்தரகாண்ட், திரிபுரா, குஜராத், மேற்குவங்கம், மராட்டியம், உத்திரபிரதேசம் மாநில அலங்கார ஊர்திகள் வகுப்பில் பங்கேற்றது. பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஊர்தி … Read more

புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீக்கம் | உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திடுக: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: “தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கான தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் மெல்லும் புகையிலை வகைகளை தடை செய்ய தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்றும், அவற்றை தடை செய்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் … Read more