மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.
லக்னோ அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், ஐதராபாத் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு, ரன் சேர்த்தார். அதேசமயம் மறுமுனையில் குயின்டன் டி காக், எவின் லெவிஸ் தலா 1 ரன், மணீஷ் பாண்டே 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து கே.எல்.ராகுலுடன் தீபக் ஹூடா இணைய, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தனர்.
தீபக் ஹூடா 51 ரன்களிலும், கே.எல்.ராகுல் 68 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர், குருணால் பாண்டியா 6 ரன்னில் வெளியேறினார். 19 ரன்கள் எடுத்த ஆயுஷ் பதோனி, ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆக, லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ஹோல்டர் 8 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
சன்ரைசர்ஸ் தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்டு, நடராஜன் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.