10 மாதங்களில் 8,905 இடங்களில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது- அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை:

சட்டசபையில் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேசன் இன்று சோழவந்தான் பகுதியில் கல்வேலிப்பட்டி, கொண்டையம்பட்டி மற்றும் இடையப்பட்டி ஆகிய இடங்களில் துணைமின் நிலையம் அமைக்க அரசு நடடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து பேசியதாவது:-

10 மாதங்களில் 216 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் உத்தரவின்படி தற்போது 193 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மீதி உள்ள 23 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்குள் அனைத்து துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். 10 மாதங்களில் 625 கோடி ரூபாய் செலவில் 8,905 இடங்களுக்கு மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.